பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1,200 அபராதம் – மாநில அரசு அறிவிப்பு!!

0
பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1,200 அபராதம் - மாநில அரசு அறிவிப்பு!!
பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1,200 அபராதம் - மாநில அரசு அறிவிப்பு!!
பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1,200 அபராதம் – மாநில அரசு அறிவிப்பு!!

மும்பையில் பொது இடங்ககளை அசுத்தம் செய்தல், எச்சில் துப்புதல் போன்றவைகளை செய்தால் ரூபாய் 1,200 அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே 200 ரூபாய் அபராத தொகையாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 1,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அபராதம் விதிப்பு:

பொது இடங்களை அசுத்தம் செய்வதால் நோய் பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. பொது இடங்களில் சிறுநீர் கழித்தல், எச்சில் துப்புதல் போன்ற செயல்களால் வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. தற்போது கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இது ஒரு தொற்று நோயாகும். அசுத்தமான இடங்கள் மூலம் காற்றிலும் பரவுகிறது . எனவே நாம் நம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது அவசியம். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எச்சில் மூலம் வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக சுகாதாரத்துறை கூறுகிறது.

TN Job “FB  Group” Join Now

பொது இடங்களில் எச்சில் துப்பினால் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் அதிகபட்சமாக ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.பொது இடங்களில் எச்சில் துப்புவது அபராதம் மற்றும் தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மும்பை மாநகராட்சியில் ஏற்கனவே பொது இடங்களில் அசுத்தம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்திருப்பதால் மேலும் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.

ஜூன் 8க்கு பின் மாவட்டங்களிடையே போக்குவரத்துக்கு அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!

பொது இடத்தில் எச்சில் துப்புபவர்களுக்கு 1200 ரூபாய் அபராதமாக வசூலிக்க மும்பை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாம். இந்த திட்டத்திற்கு மாநகராட்சி பொதுக்குழு ஒப்புதல் அளிக்க வேண்டும். அவ்வாறு அதிகாரப்பூர்வமாக அளித்தால் இனிமேல் பொது இடங்களில் அத்துமீறுபவர்கள் மீது ஆயிரத்து இருநூறு ரூபாய் அபராதமாக விதிக்கப்படும் என கூறப்படுகிறது. இதுவரை மும்பை மாநகராட்சியில் பொது இடங்களில் எச்சில் துப்பியவர்களிடம் இருந்து கடந்த 6 மாதத்தில் மட்டும் 48 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மும்பை அரசு தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!