WhatsApp பயனர்களுக்கு செம அறிவிப்பு – Multi-Device Support ஆரம்ப பதிப்பு!
வாட்ஸ் அப் செயலியில் தற்போது அறிமுகம் செய்யப்படவுள்ள பல சாதன பயன்பாட்டுடன், மறைந்துபோன செய்திகளும், view once உள்ளிட்ட சில புதிய அம்சங்கள் பயனர்களுக்கு அளிக்கப்பட உள்ளது. இந்த புதிய அம்சங்களின் செயல்பாடுகள் குறித்த கூடுதல் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய அம்சம்
உலகின் முன்னணி தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ் அப், அதன் பயனாளர்களுக்கு சில முக்கிய அம்சங்களை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் ஒரு பயனர் தனது வாட்ஸ் அப் கணக்கை பல்வேறு சாதனங்களில் உபயோகித்து கொள்ள முடியும். இது குறித்த அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன்னதாக, வாட்ஸ் அப் செயலிக்கு சொந்தமான பேஸ்புக் நிறுவனம், வாட்ஸ் அப்பின் பல சாதன அம்சம் எவ்வாறு செயல்படும் என்பது குறித்த கூடுதல் விவரங்களை பகிர்ந்துள்ளது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடி – பள்ளி கல்வித்துறை உத்தரவு!
பொதுவாக ஸ்மார்ட்போனில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவதற்கு தேவையான முக்கிய காரணிகள் இவற்றில் இருக்காது. வேறு வார்த்தைகளில் கூறின், வாட்ஸ் அப் செயலியை இணையவசதி இல்லாமலும், லேப்டாப் அல்லது டேப்லெட்டுகள் போன்ற வெவ்வேறு சாதனங்களில் பயன்படுத்த முடியும். இருப்பினும், வாட்ஸ் அப் டிராக்கர் WABetaInfo ஆல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதிய அம்சத்தின் ஆரம்ப வெளியீட்டின் படி, ஒரு தொலைபேசியில் ஒரு குறிப்பிட்ட கணக்கை மட்டுமே பயன்படுத்த முடியும்.
இந்த பல சாதன அம்சம் வாட்ஸ் அப் வலை, வாட்ஸ் அப் டெஸ்க்டாப் மற்றும் பேஸ்புக் போர்ட்டல் ஸ்மார்ட்-டிஸ்ப்ளே ஆகியவற்றுடன் மட்டுப்படுத்தப்படும் என்பதை விளக்குகிறது. அந்த வகையில் ஒரே நேரத்தில் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு தொலைபேசி அல்லது பல ஆண்ட்ராய்டு அல்லது iOS ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் அப்பை இயக்க விரும்பும் பயனர்களுக்கு இது ஒரு பின்னடைவாக கருதப்படலாம். ஆனால் வாட்ஸ் அப் செயலி உள்ளடக்கிய அனைத்து புதிய அம்சங்களும் அப்டேட்டின் படி இயங்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
பல சாதன அம்சத்தின் இறுதி பதிப்பு வெளியாகும் போது, தற்போது அறிவிக்கப்பட்டவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்டிருக்கும். அந்த வகையில் புதிய வாட்ஸ் அப் அம்சங்கள் அடங்கிய அப்டேட் அடுத்த இரண்டு மாதங்களில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் வாட்ஸ் அப் பயனர்கள் ஒரே செய்திகள் மற்றும் மீடியா கோப்புகளை இரண்டு வெவ்வேறு சாதனங்களில், ஒரே நேரத்தில் உபயோகிப்பதற்கான கருவியை அந்நிறுவனம் சோதித்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.