கர்ப்பமாக இருப்பதாக ஆசைப்படும் முல்லை, வருத்தப்படும் கதிர் – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் நாளை எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லைக்கு மருத்துவர் நல்ல ரிசல்ட் வந்திருப்பதாக சொல்கிறார். அதனால் முல்லை இப்பவே கர்ப்பமாக இருப்பதாக தோன்றுவதாக சொல்கிறார். அப்போது கதிர் முல்லை இவ்வளவு சந்தோசமாக இருப்பதை பார்த்து பயமாக இருப்பதாக சொல்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், குடும்பமே ஒற்றுமையாக இருந்து முல்லையின் ஆசையை நிறைவேற்ற காத்திருக்கின்றனர். முல்லைக்கு இயற்கையான முறையில் குழந்தை பிறக்காது என்பதால் செயற்கை முறையில் குழந்தை பிறக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றது. அந்த வகையில் முல்லைக்கு டிரீட்மென்ட் முடிந்து அவரை குடும்பத்தில் ஒவ்வொருத்தரும் அக்கறையுடன் பார்த்துக் கொள்கின்றனர், முல்லையை கதிர் நடக்க கூட விடாமல் தூக்கி செல்கிறார்.
Exams Daily Mobile App Download
அதை பார்த்து குடும்பத்தில் அனைவரும் பெருமைப்படுகின்றனர். மறுபக்கம் முல்லையை பரிசோதனை செய்த டாக்டர் எல்லாம் நல்லபடியாக இருப்பதாகவும், இன்னும் 2 வாரங்களில் தான் கரு உருவாகிவிடும் என சொல்லி இருக்கிறார். அதனால் அனைவரும் சந்தோசப்படுகின்றனர். மீனாவும் ஐஸ்வர்யாவும் முல்லைக்கு இப்பவே அந்த கலை வந்துவிட்டது என சொல்கிறார். அதை நினைத்து முல்லை மிகவும் சந்தோசப்படுகிறார். அது பற்றி தனது ஆசைகளை கதிரிடம் சொல்கிறார்.
ஆல்யா மனசா, சஞ்சீவ் ஜோடி YouTube இல் செய்த சாதனை – ரசிகர்கள் வாழ்த்து மழை!
அப்போது எனக்கு இப்பவே வயிற்றில் பாப்பா இருப்பது போல இருப்பதாக முல்லை சொல்கிறார். அதை நினைத்து கதிர் சந்தோஷப்பட்டாலும் ஆனால் இன்னும் உறுதியாக தெரியாமல் முல்லை ஆசையுடன் இருப்பதை நினைத்து கதிர் வருத்தப்படுகிறார். மேலும் முல்லையின் அம்மா அப்பா வந்து முல்லைக்கு குழந்தை பிறந்தால் தனலட்சுமி என வைக்க வேண்டும் என சொல்கிறார்கள். அதை எல்லாம் கேட்டு வருத்தமாக இருப்பதாக கதிர் சொல்கிறார்.