மீனா திட்டியதால் தற்கொலைக்கு முயற்சி செய்யும் முல்லை – குடும்பத்தினர் அதிர்ச்சி!

0
மீனா திட்டியதால் தற்கொலைக்கு முயற்சி செய்யும் முல்லை - குடும்பத்தினர் அதிர்ச்சி!
மீனா திட்டியதால் தற்கொலைக்கு முயற்சி செய்யும் முல்லை - குடும்பத்தினர் அதிர்ச்சி!
மீனா திட்டியதால் தற்கொலைக்கு முயற்சி செய்யும் முல்லை – குடும்பத்தினர் அதிர்ச்சி!

இந்த வாரம் முல்லைக்கு செயற்கை முறை சிகிச்சை தொடங்க இருக்கும் நிலையில் மீனா அடிக்கடி முல்லையை திட்டிக் கொண்டே இருப்பதால் இதற்கு மேல் உயிர் வாழ வேண்டாம் என முல்லை தற்கொலைக்கு முயற்சி செய்வது போன்ற ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. முல்லைக்கு செயற்கை முறை சிகிச்சை வெற்றியை கொடுக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதாவது முல்லையால் இயற்கையாக கருவுற முடியாது. செயற்கை முறையில் வேண்டுமானால் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என மருத்துவர் கூறுகிறார். ஆனால் செயற்கை முறை கருவுறுதலுக்கு குறைந்தது 5 லட்சம் செலவாகும் எனவும், இந்த சிகிச்சை கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும் என கூற முடியாது எனவும் மருத்துவர் கூறுகிறார்.

அரசு ஊழியர்களுக்கு மே 1 முதல் 9 நாட்கள் விடுமுறை – அரசின் அதிரடி உத்தரவு!

ஒருவேளை இந்த செயற்கை முறை கருவுறுதல் தோல்வியடைந்தால் மீண்டும் ஐந்து லட்சம் கட்டி சிகிச்சையை தொடங்க வேண்டும் எனவும் கூறுகிறார். இதைத் தொடர்ந்து மருத்துவர் கண்டிப்பாக இந்த சிகிச்சை வெற்றியை கொடுக்கும் என கூற முடியாது என கூறியுள்ள நிலையில் குடும்பத்தினர்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாமா வேண்டாமா என யோசிக்க தொடங்கியுள்ளனர். பின்பு எப்படியோ நமக்கு குழந்தை வேண்டும் என முடிவு செய்து வீடு கட்டும் பிளானை தற்போதைக்கு நிறுத்தி வைக்கலாம் என மூர்த்தி கூறுகிறார். ஆனால் மீனாவிற்கு மூர்த்தி கூறியது சுத்தமாக பிடிக்கவில்லை.

அதாவது அனைவருக்கும் சொந்தமான வீட்டை முல்லைக்காக மட்டும் எப்படி விட்டுக் கொடுக்க முடியும் எனக்கூறி சண்டை போடுகிறார். பின்பு எப்படியோ மூர்த்தியும் ஜீவாவும் ஐந்து லட்சத்தை ரெடி செய்து சிகிச்சை இந்த வாரம் தொடங்கலாம் என முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் மீனா அடிக்கடி முல்லையிடம் உன்னால் தான் வீட்டில் இவ்வளவு கடன், கஷ்டம் எனக்கூறி சண்டை போடுகிறார். முல்லை தன்னால்தான் இந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் கஷ்டப்படுகிறார்கள் நாம் ஏன் இனி உயிரோடு இருக்க வேண்டும் என தற்கொலைக்கு முயற்சி செய்வது போன்றும் குடும்பத்தில் உள்ள அனைவரும் பதறிப்போய் காப்பாற்ற போவது போன்றும் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!