செயற்கை முறை கருவுறுதலில் தோல்வியடைந்த முல்லை – அதிர்ச்சியில் குடும்பத்தினர்கள்! ப்ரோமோ ரிலீஸ்!
செயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள இந்த வாரத்திலிருந்து முல்லை சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் முல்லைக்கு செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சை தோல்வியடைவது போன்றும், முல்லை வருத்தப்படும் படியாகவும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வாரத்தில் இருந்து முல்லைக்கு செயற்கைமுறை சிகிச்சையை தொடங்க இருப்பதால் இந்த சிகிச்சை வெற்றி பெறுமா என குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதாவது முல்லைக்கு இயற்கையாக கருவுற முடியாது என மருத்துவர்கள் கூறியதை தொடர்ந்து செயற்கை முறையில் வேண்டுமானால் எவ்வளவு செலவு ஆனாலும் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என குடும்பத்தினர் முடிவு செய்கின்றனர்.
Exams Daily Mobile App Download
செயற்கைமுறை கருவுறுதலுக்கு தேவையான 5 லட்ச ரூபாய் பணத்தை ஜீவாவும் மூர்த்தியும் சேர்ந்து எப்படியோ ரெடி செய்கிறார்கள். ஆனால் இந்த செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சை சில பேருக்கு மட்டுமே முதல் சிகிச்சையிலேயே வெற்றியை கொடுக்கும். கண்டிப்பாக இந்த சிகிச்சை வெற்றியை கொடுக்கும் என சொல்ல முடியாது. ஒருவேளை இந்த கருவுறுதல் சிகிச்சை தோல்வியடைந்து விட்டால் மீண்டும் ஐந்து லட்சம் கட்டி சிகிச்சையை தொடங்க வேண்டும் என மருத்துவர் கூறுகிறார்கள். இந்த ஐந்து லட்ச ரூபாய் பணத்தை ரெடி செய்யவே மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறோம்.
இன்னொரு ஐந்து லட்ச ரூபாய் கட்ட வேண்டும் என்பது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு முடியாத ஒன்றாகும். இதனால் கண்டிப்பாக இந்த சிகிச்சை எப்படியாவது வெற்றி பெற்றே தீர வேண்டும் என வேண்டி இருக்கின்றன. இந்நிலையில் இந்த வாரத்தில் இருந்து முல்லைக்கு செயற்கைமுறை கருவுறுதல் நிகழ்ச்சி தொடங்கிவிட்டது. ஒரு மாதம் கழித்து தான் சிகிச்சை வெற்றி பெற்றுள்ளதா வயிற்றில் குழந்தை தங்கி உள்ளதா என்பதை அறிந்து கொள்ள முடியும் என மருத்துவர் கூறிவிடுகிறார். இந்நிலையில் முல்லைக்கு செயற்கை முறை சிகிச்சை தோல்வி அடைவது போன்றும், இதற்கு மேல் தனக்கு குழந்தையே பிறக்காது என முல்லை வருத்தத்தில் இருக்கும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.