முல்லை தாயான அழகான தருணம் – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லைக்கு குழந்தை இல்லாமல் போனதை நினைத்து குடும்பமே வருத்தப்பட சென்னைக்கு சென்றால் மனம் மாற்றம் வரும் என சென்றுள்ளனர். இந்நிலையில் இனி வரும் எபிசோடுகளில் முல்லை அம்மா ஆகும் அழகான தருணங்கள் குறித்த வீடியோ வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குடும்பத்தில் கயல், பாண்டியன் என ஏற்கனவே இரு குழந்தைகள் இருக்க ஆனால் முல்லைக்கு மட்டும் திருமணம் முடிந்து பல ஆண்டுகள் ஆன பின் கூட குழந்தை இல்லாமல் இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் முல்லை எதிர்பார்த்து ஏமாந்து போகிறார். அதனால் முல்லைக்கு மருத்துவமனையில் பரிசோதனை செய்கின்றனர். அதில் குழந்தை பிறக்க இயற்கையாக வழி இல்லை என டாக்டர் சொல்கிறார்.
Exams Daily Mobile App Download
அதனால் முல்லை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி பல கஷ்டங்களை அனுபவிக்கிறார். மேலும் கோவில்களில் பல பரிகாரம் செய்து முல்லை கஷ்டப்படுகிறார். அதை பார்க்க முடியாமல் குடும்பத்தில் இருப்பவர்கள் புது வீடு வேண்டாம் என தியாகம் செய்து முல்லைக்கு செயற்கை கருத்தரிப்பு செய்கின்றனர். அதன் பின் முல்லையை ஒரு குழந்தை போல பார்த்துக் கொள்கின்றனர். ஆனால் அந்த முயற்சியும் முல்லைக்கு பலன் தராமல் போய்விடுகிறது.
பிறந்தநாளில் கோபி பற்றிய உண்மையை தெரிந்து கொள்ளும் ராதிகா? “மகா சங்கமம்” சீரியலில் அடுத்து வருபவை!
முல்லை இந்த செய்தியை கேட்டு மிகவும் வருத்தப்படுகிறார். முல்லையை சமாதானம் செய்ய அனைவரும் சென்னைக்கு கிளம்பி சென்றிருக்கின்றனர். முல்லை அங்கே ஒரு சிலர் படும் கஷ்டங்களை பார்த்து மனம் மாறுகிறார். இந்நிலையில் இனி வரும் எபிசோடுகளில் முல்லை இயற்கையாகவே கர்ப்பமாக இருக்கிறார். அவர் தாயாகும் அந்த அழகான தருணத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்க அது குறித்த எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.