விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் இருந்து விலகும் முல்லை காவ்யா – ரசிகர்கள் ஷாக்!
முல்லைக்கு செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சை வெற்றியை கொடுக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்த நேரத்தில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த காவ்யா பட வாய்ப்பின் காரணமாக சீரியலில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. முல்லையால் இயற்கையாக கருவுற முடியாது என்பதால் செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சை செய்யலாம் என குடும்பத்தினர்கள் முடிவெடுக்கின்றனர். இந்த வாரத்தில் இருந்து முல்லைக்கு செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சை நடைபெற்று கொண்டிருக்கிறது. கண்டிப்பாக இந்த சிகிச்சை வெற்றி பெறுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.
விஜய் டிவி ‘கனா காணும் காலங்கள்’ சீரியல் ரசிகரக்ளுக்கு ஹாப்பி நியூஸ் – ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகர்!
இந்த செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சைக்கு மட்டுமே 5 லட்சம் வரை செலவு செய்துள்ளனர். 5 லட்ச ரூபாய் பணத்தை எப்படியோ மூர்த்தியும் ஜீவாவும் சேர்ந்து ரெடி செய்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் வீடு கட்டும் பிளானையும் நிறுத்தி வைத்துள்ளனர். இவ்வளவு செலவு செய்தும் செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சை கண்டிப்பாக வெற்றியை கொடுக்குமா என்பது சந்தேகமே என்று மருத்துவர் கூறுகிறார். ஒருவேளை செயற்கை முறை சிகிச்சை தோல்வி அடைந்துவிட்டால் மீண்டும் 5 லட்சம் செலவு செய்து முதலில் இருந்து சிகிச்சையை தொடங்க வேண்டும். இந்த ஐந்து லட்சத்தை ரெடி செய்யவே குடும்பத்தில் உள்ள அனைவரும் மிகவும் கஷ்டப் பட்டிருக்கிறார்கள்.
Exams Daily Mobile App Download
மீண்டும் ஐந்து லட்சத்தை எப்படி ரெடி செய்வது என்பது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினருக்கு நடக்காத ஒன்று. ஒரு மாதம் கழித்து தான் முல்லையின் வயிற்றில் குழந்தை தங்கியுள்ளதா என்பதை கண்டுபிடிக்க முடியும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். சிகிச்சை வெற்றி பெறுமா என சீரியல் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த காவ்யா பட வாய்ப்பின் காரணமாக சீரியலில் இருந்து விலகவுள்ளார். ஏற்கனவே முல்லை கதாபாத்திரத்தில் சித்ரா நடித்து கொண்டிருந்தார். இவருக்கு பதிலாக தான் காவ்யா முல்லையாக அறிமுகமானார். தற்போது காவ்யாவும் விலகவுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.