கோயிலுக்கு சென்று பரிகாரம் செய்த பின்னர் தாயாகும் முல்லை – மகிழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூலம் தான் அந்த சீரியலில் நடித்து வரும் பலரும் மிகவும் பிரபலமாகி உள்ளது மறுக்க முடியாத உண்மை. இந்நிலையில், தற்போது சீரியலில் உள்ள கதாபாத்திரங்கள் மத்தியில் போட்டி நிலவும் சூழல் வந்துள்ளது.
தாயாகும் முல்லை:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லைக்கு இயற்கையான முறையில் தாயாகும் வாய்ப்பு இல்லை என்று மருத்துவர்கள் கூறி விடுகின்றனர். இதனால் மனம் ஒடிந்து போய் விடுகிறார் முல்லை. முல்லையை குடும்பத்தினர் அனைவரும் சமாதானம் செய்து வருகின்றனர். இதற்கு வேறு வழி ஏதேனும் உண்டா என்று கேட்க மருத்துவமனைக்கு சென்று கேட்கின்றனர். அங்கு செயற்கை முறையில் கருத்தரிக்க வாய்ப்புகள் உள்ளது. ஆனால் அதற்கு கிட்டத்தட்ட 2 முதல் 5 லட்சம் வரை செலவாகும் என்று சொல்லி விடுகின்றனர்.
பாக்கியா யார் என்பதை அறிந்து கொள்ளும் ராதிகா – கோபியின் சுயரூபம் தெரிய வருமா?
வீடு கட்ட நினைத்த திட்டத்தை இதனால் குடும்பத்தினர் அனைவரும் கைவிடுகின்றனர். முல்லைக்கு குழந்தை பிறப்பது தான் முக்கியம் என்று சொல்லி விடுகின்றனர். முல்லையை பார்க்க வீட்டிற்கு வந்த கஸ்தூரி கோயில் பரிகாரத்தை மீண்டும் நினைவு படுத்துகிறார். எப்படியும் இவங்க கிட்ட அவ்வளவு பணம் இல்லை அதனால் கோயில் பரிகாரத்தை பண்ணி பார்க்கலாம் என்று சொல்லுகிறார்.
பிரசவ வலியால் துடித்த ஆலியா மானசா – ஆறுதல் கூறிய சஞ்சீவ்! வைரலாகும் வீடியோ!
முல்லையும் கஸ்தூரி சொல்வது தான் சரி என்ற முடிவிற்கு வந்து விடுகிறார். வீட்டில் உள்ளவர்களிடம் பேசி விட்டு கோயிலு போகலாம் என்று சொல்லும் போது அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லும் கதிர், அதையும் மீறி முல்லை கோயிலுக்கு செல்லும் போது அங்கு வந்து சர்பிரைஸ் கொடுக்கிறார். பரிகாரத்தை நீ செய்ய வேண்டாம், நான் செய்கிறேன் என்று கூறி கதிர் பரிகாரம் செய்கிறார். அதன்பிறகு முல்லை தாயாக்குவது போன்ற காட்சிகள் சீரியலில் வர உள்ளது.