அரசு பேருந்து நடத்துனர், ஓட்டுநர்களுக்கு பறந்த சுற்றறிக்கை – போக்குவரத்துக்கழகத்தின் அதிரடி உத்தரவு!!
தற்போது அரசு பேருந்துகளில் சில இடங்களில் நடத்துனர் மற்றும் ஓட்டுனர் இருக்கையில் வேறு சிலர் அமர்ந்து இயக்குவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் நடத்துனர் மற்றும் ஓட்டுநர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
ஓட்டுநர்கள்
தமிழகத்தில் தற்போது அரசு பேருந்துகளில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களின் இருக்கைகளில் வேறு சிலர் அமர்ந்து இயக்குவதாக புகார்கள் எழுந்துள்ளது. மேலும் கடந்த 28ம் தேதி வேறு சிலர் அரசு பேருந்துகளை இயக்கி அருகில் இருக்கும் டீசல் பங்கினை சேதப்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. அதனால் இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருப்பதற்கு மாநில போக்குவரத்துக்கழகம் நடத்துனர் மற்றும் ஓட்டுநர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
ஒரே நாளில் அதிரடி உயர்வை சந்தித்த தங்கம் விலை.. ஷாக் ஆன இல்லத்தரசிகள் – இன்றைய நிலவரம் உள்ளே!
Follow our Instagram for more Latest Updates
இந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எந்த காரணத்துக்காகவும் அரசு பேருந்துகளை ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தவிர வேறு யாரும் பணிமனை உள்ளே அல்லது பணிமனை வெளியே இயக்கக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிளை மேலாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அனைத்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு இந்த தகவலை தெரியப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயிற்சி பள்ளிக்கு வரும் அனைவருக்கும் இது தொடர்பான தகவல்களை தெரியப்படுத்த அங்கிருக்கும் பலகையில் ஒட்ட வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.