வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு மானியம் – கலெக்டர் உத்தரவு
படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கும் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார். இது குறித்து ஒரு செய்தி குறிப்பு வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளவையாவன,
சிறுதொழில்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட தொழில் மையங்கள் வாயிலாக படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கும் திட்டம் திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் ரூ. 1.25 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இவற்றில் 25% மானியமாக கணக்கிடப்படும். இதற்கு 18 முதல் 35 வயது வரை இருப்பவராகவும், 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கவும் இருக்க வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தில் இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31 தேதி வரை கடன் வழங்கப்படும் பயனாளிகளுக்கு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நேர்முகத்தேர்வு மற்றும் தொழிற்பயிற்சி ஆகியவற்றில் இருந்து தமிழக அரசு விலக்கு அளித்துள்ளது. எனவே இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர் என்ற http://msmeonline.in.gov.in/ இணையதளத்தின் மூலம் பதிவு செய்து பயன் பெறலாம்.
இந்த மானிய தொகையினை பெறுவதற்கு குடும்ப வருமான தேவை இல்லை. மேலும் தகுதியானவர் காக்களூர் தொழிற்பேட்டையில் நேரில் சென்று தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |