IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மீண்டும் வலைப்பயிற்சியில் MS தோனி!
இந்த ஆண்டுக்கான IPL தொடர் வருகிற மார்ச் மாதம் 27 ஆம் தேதி இந்தியாவில் நடைபெற உள்ளது. IPL வீரர்களுக்கான மெகா ஏலம் பிப்ரவரி 13 தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் CSK கேப்டன் MS தோனி மீண்டும் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ரசிகர்கள் உற்சாகம்:
ஐபிஎல் 2022க்கான மெகா ஏலம் இம்மாதம் 12 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியின் பார்மல் கேப்டனும் தற்போதைய CSK அணி கேப்டனுமாகிய மகேந்திர சிங் தோனி ஜனவரி 28 ஆம் தேதி சென்னை வந்தடைந்தார். இதை தொடர்ந்து அடுத்த 10 ஆண்டுகளை மனதில் வைத்து அதற்கான அணியை மெகா ஏலத்தில் எடுக்கும் படி CSK அணி ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மற்றும் CSK ஹெட் கோச் பிளெமிங் ஆகியோர் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். இதனால் அதிக இளம் வீரர்களை அணியில் எடுக்க CSK அணி திட்டம் போட்டுள்ளது.
அரசுத்துறையில் உள்ள ஏராளமான காலிப்பணியிடங்கள் – முதல்வர் முக்கிய அறிவிப்பு!
மேலும் இந்த ஆண்டு IPL மெகா ஏலத்தில் வலுவான வீரர்களை தேர்ந்தெடுக்கும் வகையிலும் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு IPL சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி BCCI அறிவிப்பின் படி 4 வீரர்களாகிய தோனியை 12 கோடிக்கும், மொயின் அலியை 8 கோடிக்கும், ருதுராஜ் கெய்க்வாட்டை 6 கோடி க்கும் சிஎஸ்கே தக்கவைத்துள்ளது. இந்த ஆண்டு ஏலத்தில் வீரர்களை எடுக்க CSK க்கு 48 கோடி ரூபாய் மீதம் உள்ளது. இந்நிலையில் CSK கேப்டன் MS தோனி மீண்டும் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ சமூக வலயத்தளங்களில் வைரலாகி வருகிறது.
TNPSC கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – சம்பளம் ரூ.1,77,500! பிப்.21 கடைசி நாள்!
கடந்த ஆண்டு தோனியின் பேட்டின் பார்ம் கவலைக்குரியதாக இருந்தது, இதை தொடர்ந்து IPL 15 வது சீசனுக்காக தனது பேட்டிங் பார்மை அதிகரிக்க தோனி வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். தோனி பேட்டிங் செய்த 17 வினாடிகள் கொண்ட கிளிப் சமூக வலயத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது . இந்த வீடியோ பதிவு தோனி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 220 போட்டிகளில் 39.5 சராசரியில் 4,746 ரன்கள் குவித்துள்ளார் மற்றும் 23 அரை சதங்கள் அடித்துள்ளார்.