சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – துப்பாக்கி சுடும் வீரராக மாறிய MS தோனி!
2022 இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் தோனி ராஞ்சியில் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது எடுக்கப்பட்ட தோனியின் வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
வைரலாகும் வீடியோ பதிவு:
ஐபிஎல் 2022க்கான மெகா ஏலம் இம்மாதம் 12 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியின் பார்மல் கேப்டனும் தற்போதைய CSK அணி கேப்டனுமாகிய மகேந்திர சிங் தோனி ஜனவரி 28 ஆம் தேதி சென்னை வந்தடைந்தார். இதை தொடர்ந்து அடுத்த 10 ஆண்டுகளை மனதில் வைத்து அதற்கான அணியை மெகா ஏலத்தில் எடுக்கும் படி CSK அணி நாளை ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மற்றும் CSK ஹெட் கோச் பிளெமிங் ஆகியோர் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். இதனால் அதிக இளம் வீரர்களை அணியில் எடுக்க CSK அணி திட்டம் போட்டுள்ளது.
விஜய் & சூர்யாவுடன் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 அம்மு அபிராமி – ஷாக்கிங் தகவல்! ரசிகர்கள் உற்சாகம்!
கடந்த ஆண்டு IPL சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி BCCI அறிவிப்பின் படி 4 வீரர்களாகிய தோனியை 12 கோடிக்கும், மொயின் அலியை 8 கோடிக்கும், ருதுராஜ் கெய்க்வாட்டை 6 கோடி க்கும் சிஎஸ்கே தக்கவைத்துள்ளது. இந்த ஆண்டு ஏலத்தில் வீரர்களை எடுக்க CSK க்கு 48 கோடி ரூபாய் மீதம் உள்ளது. அதனை தொடர்ந்து நடக்கவிருக்கும் 15 வது IPL சீசன் மெகா ஏலத்தில் சிறந்த வீரர்களை தேர்ந்தெடுத்து மீண்டும் தோனி தலைமையிலான CSK அணி IPL கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.
இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு தனது பேட்டிங் பார்ம் சரி இல்லாத காரணத்தினால் மெகா ஏலத்தில் கலந்து கொள்வதற்கு முன்பு மீண்டும் தோனி ராஞ்சிக்கு சென்று பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனை தொடர்ந்து உடல் ஃபிட்னஸ் பயிற்சியாக டென்னிஸ் , புட்பால் போன்ற விளையாட்டு பயிற்சிகளையும் மேற்கொள்கிறார். இந்நிலையில் சமீபத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது எடுக்கப்பட்ட தோனியின் வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை தல தோனியின் ரசிகர்கள் அதிகமா ஷேர் செய்து வருகிறார்கள்.