திருச்சி பாரதிதாசன் பல்கலை M.Phil., மாணவர் சேர்க்கை – அக்டோபர் 29 கடைசி நாள்!
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2021-22 ஆம் ஆண்டுக்கான M.PHIL படிப்புகளுக்கு, முழு நேரம் அல்லது பகுதி நேரம் பயில்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. இதனால் கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. அதனால் மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அதன்படி பள்ளிக்கல்வித்துறை கடந்த ஜூலை 19ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழை வெளியிட்டது.
ஏழு மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
அதனால் பல்வேறு கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை தொடங்கி உள்ளன. அந்த வரிசையில் திருச்சியில் செயல்பட்டு வரும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள இணைப்பு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை பட்டபடிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்ட நிலையில் தற்போது ஆராய்ச்சி படிப்பான M.PHIL படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
திருச்சி பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள இணைப்பு கல்லூரிகளில் 2021-22 ஆம் கல்யாண்டில் M.PHIL முழு நேரம் அல்லது பகுதி நேரம் பயில விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம் எனவும், விண்ணப்பங்கள் அனுப்ப அக்டோபர் 29ஆம் தேதி கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.