இறந்த அரசு ஊழியர்களின் மகள்களுக்கு வேலை வழங்கப்படும் – மத்திய பிரதேச அரசின் சூப்பரான அறிவிப்பு!
பொதுவாக அரசு துறையில் பணியில் இருக்கும் போது பணியாளர் இறந்தால் கருணை அடிப்படையில், அவரின் வாரிசுதாரர்களுக்கு அந்த வேலை வழங்கப்படும். இந்த நிலையில், தற்போது இந்த விதிமுறையை மாற்றி அமைத்து மத்திய பிரதேச முதல்வர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அரசு வேலை:
நாட்டில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு வகையான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, வீட்டு வாடகைப்படி, ஓய்வூதியம், ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கி வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
மேலும் தற்போது அரசு ஊழியர்கள் பணிக்காலம் முடிவதற்குள் இறந்து விட்டால் அவரின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படும். இந்த நிலையில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் கருணையாளர் நியமனக் கொள்கையில் திருத்தம் செய்ய ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பொது நூலகங்கள் – Amazon Kindle வாயிலாக நூல்களை படிக்கும் வசதி அறிமுகம்!!
அதன்படி இது தொடர்பான அறிவிப்பில், கருணையாளர் நியமனக் கொள்கையின்படி (Compassionate Appointment Policy) இறந்த அரசு ஊழியர்களின் மகனுக்கு அரசு வேலை வழங்கப்பட்டு வந்தது. தற்போது திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, இறந்த அரசு ஊழியர்களின் திருமணமான மகளுக்கு வேலை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.