IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஷாக் – மொயீன் அலி வருவதில் புதிய சிக்கல்?
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் CSK அணிக்காக விளையாட இருக்கும் இங்கிலாந்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் மொயீன் அலி விசா பிரச்சனைகள் காரணமாக அணியில் சேருவதில் தாமதம் ஏற்படும் என்று ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
மொயீன் அலி
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2021 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் சார்பில் களமிறங்கிய இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பேட்டிங் ஆல்-ரவுண்டர் மொயீன் அலி சிறப்பாக செயல்பட்டிருந்தார். மேலும் கடந்த சீசனில் CSK அணியின் வெற்றிக்கும் இவர் முக்கிய பங்கு வகித்திருந்தார். இதன் காரணமாக மொயீன் அலி இந்த ஆண்டிற்கான IPL தொடரில் ரூ.8 கோடிக்கு CSK அணியின் உரிமையாளரால் தக்கவைக்கப்பட்டார். இப்போது இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2022 போட்டிகளின் முதல் ஆட்டத்தில் விளையாட இருக்கும் CSK அணியினர் தற்போது சூரத்தில் பயிற்சி ஆட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு – நிதியமைச்சர் அறிவிப்பு!
இதில் MS தோனி, ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட ஸ்டார் வீரர்கள் கலந்து கொண்டு வரும் நிலையில் மொயீன் அலி விசா பிரச்சனைகள் காரணமாக அணியில் சேருவதில் தாமதம் ஏற்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து CSK தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில், ‘பிப்ரவரி 28 அன்று மொயின் அலி விசாவிற்கு விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு 20 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவர் அடிக்கடி இந்தியாவுக்கு பயணித்து வருகிறார். இருப்பினும் இன்னும் அவருக்கு பயண ஆவணங்கள் கிடைக்கவில்லை. விரைவில் அவர் அணியில் இணைவார் என நம்புகிறோம்.
ஆவணங்களை பெற்ற பிறகு அடுத்த விமானத்தில் வருவதாக அவர் எங்களிடம் கூறியுள்ளார்’ என்று கூறி இருக்கிறார். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) மொயீன் அலி விரைவில் அணியில் இணைவதற்கு உதவி செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மார்ச் 26 அன்று வான்கடே மைதானத்தில் வைத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர் கொள்கிறது. இதற்கிடையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் பணியாளர் ஒருவர் லண்டனில் சிக்கிக்கொண்டு இதே போன்ற சிக்கலை எதிர்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.