பல தடைகளை தாண்டி சக்தியுடன் தனியாக பேசிய வருண் – “மௌன ராகம் 2” சீரியல் இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “மௌன ராகம் 2” சீரியலில் கதைக்களம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. சக்தியை தேடி பல இடங்களில் வருண் அலைய கடைசியாக பல தடைகளை தாண்டி வருண் சத்யாவிடம் பேச இருக்கிறார். இது குறித்து இன்றைய எபிசோடில் காட்டப்பட்டுள்ளது.
மௌன ராகம் 2:
மௌன ராகம் 2 சீரியலில் சத்யாவின் அப்பா கார்த்திக் கிருஷ்ணா என்ற உண்மையையும் காதம்பரி, ஸ்ருதி பற்றிய எல்லா உண்மைகளையும் தெரிந்து மனோகர் மிகுந்த கோவத்தில் இருக்கிறார். மேலும் ஷீலாவும் ஸ்ருதியும் சக்தியை பற்றி தவறாக சொல்லி மனோகரின் கோவத்தை அதிகரிக்கின்றனர். ஆனால் வருணிடம் கார்த்திக் பேசியதால் வருணிற்கு சத்யா மீது கோவம் இல்லாமல் இருக்கிறது. அதனால் வருண் சத்யாவை தேடி குற்றாலம் வர அங்கே பழனியை சந்தித்து சக்தியின் குழந்தை பருவத்தை தெரிந்து கொள்கிறார்.
ஆனால் மனோகரன் சக்தியை பிரிய வேண்டும் என்பதால் வருண் அனுப்பியது போல விவாகரத்து நோட்டீஸ் அனுப்புகின்றனர், அதனால் சக்தியும் மல்லிகாவும் வருண் மீது கோவமாக இருக்கின்றனர். வருணை பார்த்து மல்லிகா சண்டை போட ஆனால் சக்தி வந்தால் தான் நான் போவேன் என வருண் பிடிவாதமாக இருக்கிறார். மனோகரன் ஷீலா வருணை தேடி வந்துவிட ஆனால் வருண் சென்னைக்கு செல்லவில்லை. சக்தியின் அத்தை வருணிற்கு ஆதரவாக இருக்கிறார்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் இன்றைய எபிசோடில் சக்தி வருண் தனியாக சந்தித்து பேச வாய்ப்பு கிடைக்கிறது. சக்தியை தேடி வருண் குற்றாலம் வந்ததும் சக்தியின் மாமா பழனியிடம் குழந்தை பருவத்தை தெரிந்து கொண்டதையும் சொல்ல சக்தி முகம் மாறுகிறது. ஆனால் அதற்குள் பழனி வந்து சக்தியை அழைத்து கொண்டு செல்கிறார். சக்தி வருணை புரிந்து கொண்டு அவருடன் சேர்ந்து வாழ்வாரா ?என்ன முடிவு எடுப்பார், மனோகரன் சக்தியை ஏற்றுக் கொள்வாரா என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.