நெருப்பை பார்த்து பயந்த வருண், முரட்டுத்தனமாக தாக்கப்பட்ட சத்யா – “மௌன ராகம் 2” ப்ரோமோ!
விஜய் டிவி “மௌன ராகம் 2” சீரியலில் ஷீலா பற்றி தெரிந்து கொண்ட மனோகர் அவரை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். அதனால் ஷீலா, சத்யா மீது கோவமாக இருக்கிறார்.
மௌன ராகம் 2 ப்ரோமோ:
“மௌன ராகம் 2” சீரியலில் தற்போது அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. மனோகரை பழிவாங்க நினைத்து ஷீலா வருண் சத்யாவை பிரிக்க கொடைக்கானல் சென்ற இடத்தில் சத்யா பணத்திற்காக தான் திருமணம் செய்தாள் என சொல்கிறார். அதை கேட்டு வருண் மீது கோவமாக இருக்க சத்யாவை வெறுத்து ஒதுக்குகிறார். அதனால் மனோகர் வருணிடம் என்ன பிரச்சனை என கேட்க, பணத்திற்காக தான் இவள் திருமணம் செய்தால் இவளுடைய பாசம் எல்லாம் பொய் என சொல்கிறார்.
Vijay Tv Bigg Boss 5 Promo | வீட்டின் தலைவர் பதவிக்கு புது டாஸ்க், மோதும் போட்டியாளர்கள்!
அதனால் கோவப்பட்ட சத்யா நான் உங்களிடம் வாங்கிய பணத்தை கொடுத்து விட்டு என் அன்பை நிரூபிக்கிறேன் என சொல்லி பாடல் போட்டியில் பாடி வெற்றி பெறுகிறார். பின் வருண் சத்யாவை புரிந்து கொள்ள இவ்வளவு பிரச்சனைக்கு காரணம் ஷீலா தான் என கண்டுபிடித்து ஷீலாவை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். ஆனால் சத்யா ஆதரவாக பேசி இருக்க சொல்கிறார். அதனால் கோவமாக இருக்கும் ஷீலா சத்யாவை பழிவாங்க நினைக்கிறார். சத்யா சமையல் அறையில் சமைத்து கொண்டிருக்க, வருணிடம் சென்று சத்யா வர சொன்னதாக சொல்கிறார்.
பின் வருண் அங்கே சென்று சத்யாவை வம்பிழுக்கிறார். அப்போது சத்யா அடுப்பில் இருக்கும் சட்டியை இறக்க அந்த நெருப்பை பார்த்து வருண் முரட்டு தனமாக நடந்து கொள்கிறார். வருண் எல்லா பொருட்களையும் போட சத்யா நெற்றியில் அடிபடுகிறது. பின் ஷீலா சத்யாவை அவர் ரூமில் படுக்க சொல்கிறார். ஆனால் சத்யா வருண் ரூமிற்கு செல்ல சத்யாவை நினைத்து வருண் வருத்தப்படுகிறார். மறுபுறம் சத்யா வருணை பார்த்து பயப்படுகிறார்.