ஆல்யா, சஞ்சீவ் ஜோடிக்கு 75 லட்ச ரூபாய் மதிப்புள்ள காரை வழங்கிய மாமியார் – வைரலாகும் வீடியோ!
ஆலியாவின் பிரசவத்திற்கு 4 நாட்களுக்கு முன்பாக 75 லட்ச மதிப்புள்ள பென்ஸ் காரை மாமியாரின் கையால் ஆலியா வாங்கியுள்ளார். மாமியார் கையால் புது கார் வாங்கிய சந்தோஷத்தில் அனைவரிடமும் அந்த மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
ஆல்யா, சஞ்சீவ்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலமாக அறிமுகமாகி காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் தான் ஆலியா மற்றும் சஞ்சீவ். இவர்களுக்கு ஐலா என்கிற பெண் குழந்தையும் இருக்கிறார். தற்போது ஆலியாவிற்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே என்ன பெயர் வைக்கலாம் என்பதை சஞ்சீவ் மற்றும் ஆலியா முடிவு செய்துவிட்டனர். அதன்படி இரண்டாவது குழந்தைக்கு அர்ஷ் என பெயர் வைத்துள்ளனர்.
சன் டிவி ‘கயல்’ சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஒரு மணிநேர ஸ்பெஷல் எபிசோட்! ப்ரோமோ ரிலீஸ்!
ஐலா பாப்பா பிறப்பதற்கு முன்பு தான் ஆலியா மற்றும் இருவரும் பல லட்ச மதிப்புள்ள பென்ஸ் காரை வாங்கினர். தற்போது மீண்டும் இரண்டாவது குழந்தை பிறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பாக மற்றொரு கருப்பு நிற பென்ஸ் காரை வாங்கியுள்ளனர். இதனுடைய விலையை கேட்டால் அனைவருமே வியப்படைவர். அதாவது 75 லட்சத்திற்கு காரை வாங்கியுள்ளனர். ஐலா பாப்பா பிறகும் போது காரை வாங்கினோம். அந்த ஆண்டு எங்களுக்கு மிக சிறப்பாக அமைந்தது.
குக் வித் கோமாளி’ சிவாங்கிக்கு இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட சோகம் – ரசிகர்கள் உருக்கம்!
அதனால் அதே மாதிரி அர்ஷ் பிறப்பதற்கு முன்பாக காரை வாங்கியுள்ளோம் என கூறியுள்ளனர். கார் வாங்க குடும்பத்தில் உள்ள அனைவரையுமே அழைத்து சென்றிருக்கின்றனர். மேலும், பென்ஸ் ஷோரூமிலேயே அரபிக் குத்து பாட்டு போட்டு குடும்பமே கொண்டாடியுள்ளனர். மேலும், இந்த காரினை சஞ்சீவின் அம்மா கையில் தான் ரிசீவ் செய்துள்ளனர். ஐலா பாப்பாவின் இரண்டாவது பிறந்தநாளுக்குள் இரண்டு பென்ஸ் காரை வாங்கியுள்ளனர். அடுத்த பிறந்தநாளுக்குள் இன்னொரு பென்ஸ் காரை வாங்கி விடுவார்கள் போல.