இந்தோனீசியாவில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு – அரசின் அதிரடி நடவடிக்கை! இருமல் மருந்துகளுக்கு தடை!
இந்தோனேசியாவில் நடப்பாண்டு கடுமையான சிறுநீரக பாதிப்பு காரணமாக 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இது குறித்து அந்நாட்டு அரசு விசாரித்து வருகிறது. இந்த விசாரணையில் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
குழந்தைகள் உயிரிழப்பு:
உலகம் முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு முதல் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா பெருந்தொற்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனா அடுத்தடுத்த நிலைகளுக்கு உருமாறி அதிக வீரியத்துடன் பரவ தொடங்கியது. இந்த கொரோனாவுக்கு மத்தியில் இந்தோனிசியாவில் சிறுநீரக பாதிப்பால் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இது அந்நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு – சமூக நலத்துறை திட்டம்! அமைச்சர் தகவல்!
இந்த இறப்பு குறித்து தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் காய்ச்சல் மருந்து கொடுக்கப்பட்ட சுமார் 70 குழந்தைகள் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தோனேசியாவில் குழந்தைகளின் இறப்புக்கு தொடர்பான பொருட்களை அந்நாட்டு தடை செய்துள்ளது. மேலும் அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட மருந்துகள் அவற்றில் சேர்ந்துள்ள மருந்துகள் குறித்து ஆராய்ந்து வருகிறது.
Exams Daily Mobile App Download
காய்ச்சலுக்கு பயன்படுத்தப்பட்ட மருந்தில் டைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைகோல் ஆகிய ரசாயனங்கள் பொருட்கள் மருந்தில் அதிக அளவு பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் டெல்லியை உள்ள மைடன் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ளது. இதனையடுத்து காம்பியா அரசும் இந்திய அரசும் குழந்தைகளின் இறப்பு தொடர்பான மருந்து மற்றும் அதனை தயாரித்துள்ள நிறுவனத்தை விசாரித்து வருகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்