தமிழக ஆவின் நிறுவனத்தில் 1000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் – அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்திலுள்ள ஆவின் நிறுவனங்களில் கூடுதலாக ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் ஆவின் கூட்டுறவு ஒன்றியம் அமைக்க உள்ளதாகவும் பால்வளத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
ஆவின் நிறுவனம்:
ஆவின் நிறுவனம் தமிழ்நாடு அரசின் பால்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனத்தில் பால் கொள்முதல், பதப்படுத்துதல், குடியிருப்புகள் மற்றும் விற்பனை என பலவிதமான பணிகள் ஆவின் நிறுவனத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனத்தில் பால் சார்ந்த பொருட்கள் மட்டுமல்லாமல் பல பொருட்களையும் விற்பனை செய்ய அரசு சார்பில் திட்டமிடப்பட்டு கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் ஆவின் நிறுவனம் 5 ரூபாயில் நூடுல்ஸ் விற்பனை தொடங்க உள்ளதாகவும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிவித்திருந்தார்.
Exams Daily Mobile App Download
இன்று நாமக்கல்லில் உள்ள பால் உற்பத்தி தொடர்பான இடங்களை பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு செய்தார். தமிழகத்தில் மட்டுமே தற்போது 9 ஆயிரத்து 354 பால் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. மேலும், தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் விரைவில் ஆவின் கூட்டுறவு ஒன்றியங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பால் கூட்டுறவு சங்கங்களில் மட்டுமே இருபத்தி ஒரு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் அங்கத்தினர்களாக பணியாற்றி வருகின்றனர்.
மீண்டும் புதிய வகை வைரஸ் பரவல் – மருத்துவர்கள் எச்சரிக்கை!
மேலும், நாள் ஒன்றுக்கு மட்டுமே 42 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனிடையே பாலுக்கான கொள்முதல் விலை வரும் ஜூன் 27ஆம் தேதி முதல் உயர உள்ளதாகவும் முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும், திமுக ஆட்சிக்கு பிறகு ஆவின் நிறுவனத்தில் கூடுதலாக சில கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. வரும் தீபாவளி பண்டிகைக்கு மட்டுமே ரூபாய் 250 கோடிக்கு இனிப்புகள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள ஆவின் நிறுவனத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும், விரைவில் இந்த காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார்.