TCS, Wipro, Infosys நிறுவனங்களில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள் – ஆய்வு தகவல்!

1
TCS, Wipro, Infosys நிறுவனங்களில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள் - ஆய்வு தகவல்!
TCS, Wipro, Infosys நிறுவனங்களில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள் - ஆய்வு தகவல்!
TCS, Wipro, Infosys நிறுவனங்களில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள் – ஆய்வு தகவல்!

இந்தியாவில் செயல்பட்டு வரும் TCS, இன்போசிஸ் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப (IT) நிறுவனங்களில் புதிய பணியமர்த்தலுக்கான அறிவிப்புகள் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்நிறுவனங்களில் சுமார் 400% வேலைவாய்ப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக ஒரு ஆய்வு தகவல் கூறுகிறது.

ஆய்வு தகவல்

இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலைக்கான அச்சுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் மாநிலங்கள் தோறும் மீண்டுமாக கொரோனா தொடர்புடைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக 2 ஆம் அலை தொற்று ஓய்ந்திருக்கும் பட்சத்தில் மக்கள் தற்பொழுது தான் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர். அதாவது கொரோனாவால் ஏற்பட்ட வேலையிழப்பு, பொருளாதார நெருக்கடிகள் அனைத்தும் மெல்ல மறையத்துவங்கியுள்ள சூழலில் சில தொழில் நிறுவனங்கள் மீண்டுமாக செயல்பட துவங்கியுள்ளது.

6 முதல் 8ம் வகுப்புகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

குறிப்பாக கொரோனா தொற்று நோய் தாக்கத்தினால் அடுத்தடுத்து விதிக்கப்பட்ட முழு ஊரடங்கு மற்றும் பணிநிறுத்தங்கள் வேலைவாய்ப்பு துறையில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இது தவிர இந்தியா முழுவதும் உள்ள பல நிறுவனங்களில் வேலை முடக்கம், பணிநீக்கங்களும் கணிசமாக உயர்ந்தது. இதனிடையே தற்போது கொரோனா 3 ஆம் அலைக்கான எச்சரிப்புகள் கொடுக்கப்பட்டு வருவதால், ஊழியர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

ஆனால் TCS, இன்போசிஸ் போன்ற சில IT நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் புதிய ஊழியர்களை பணியமர்த்தும் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு பிறகு டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), இன்போசிஸ், விப்ரோ போன்ற பெரிய முன்னணி IT நிறுவனங்கள் பெரும் பணியமர்த்தல் இயக்கத்தை தொடங்கியுள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை கூறுகிறது. அதாவது இந்த ஆண்டில் மட்டும் IT நிபுணர்களுக்கான தேவை சுமார் 400 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 சரிவு – இன்றைய நிலவரம்!

மேலும், முழுநேர பொறியியலாளர்களுக்கு இந்த IT நிறுவனங்கள் 70 முதல் 120 சதவிகித உயர்வை வழங்குகின்றன என்றும் அறிக்கை கூறுகிறது. சமீபத்தில், TCS நிறுவனம் தனது புதிய வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்பில் பெண் நிபுணர்களுக்கான ஒதுக்கீடு குறித்து அறிவித்துள்ளது. இதேபோல், இன்போசிஸ், விப்ரோ மற்றும் பிற IT நிறுவனங்களும் பெருமளவு ஆதிக்கத்துடன் இந்தியா முழுவதும் வேலைவாய்ப்பு பணிகளை துவங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!