EPFO கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இனி அதிக வட்டி – விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
நாடு முழுவதும் உள்ள பிஎஃப் பயனாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகி இருக்கிறது. அதன் படி பங்குச் சந்தையில் முதலீட்டு வரம்பை அதிகரிப்பது குறித்து முடிவெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய அறிவிப்பு:
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப் ) திட்டத்தில் ஒரு பயனாளராக இருக்கின்றனர். அந்த வகையில் 2021-22 நிதியாண்டிற்கான இபிஎஃப் விகிதத்தை 8.5 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதமாக இபிஎஃப் வாரியம் குறைத்தது. இது குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் இபிஎஃப் அதன் முதலீட்டாளர்களுக்கு அதிக வருமானத்தை வழங்க திட்டமிட்டுள்ளது. அதன் படி இபிஎஃப்ஓ வாரியம் பங்குச் சந்தையில் முதலீட்டு வரம்பை அதிகரிப்பது குறித்து முக்கிய முடிவெடுக்க இருக்கிறது.
Exams Daily Mobile App Download
இபிஎஃப்ஓ வாரியமானது வருகிற ஜூலை 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் கூட இருக்கிறது. இந்த கூட்டத்தில் பங்குச் சந்தை மற்றும் தொடர்புடைய தயாரிப்புகளில் தற்போதுள்ள முதலீட்டு வரம்பை 15 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்துவது குறித்து முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முதலீட்டாளர்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபம் கிடைக்கும். இது குறித்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் ராமேஷ்வர் டெலி பதில் அளித்து இருக்கிறார்.
WhatsApp செயலியில் அறிமுகப்படுத்தபட்டுள்ள புதிய அம்சம் – சூப்பர் அப்டேட்!
அதில் சிபிடியின் துணைக் குழுவான எஃப்ஐஏசி, பங்குகள் மற்றும் பங்குகள் தொடர்பான முதலீட்டு வரம்பை 5-15 சதவிகிதத்திலிருந்து 5-20 சதவீதமாக உயர்த்த பரிந்துரைத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். ஆனால் சில தொழிற் சங்கங்கள் இபிஎஃப்ஓ-ன் முதலீட்டு வரம்புகளை அதிகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த முதலீட்டிற்கு அரசு உத்தரவாதம் இருக்காது என்பதால் இதன் மூலம் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.