காவல் நிலையங்களில் கூடுதல் பெண் போலீசார் நியமனம் – மத்திய அரசு முடிவு!
நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கூடுதலாக 3 பெண் எஸ்.ஐ.க்கள் மற்றும் 10 பெண் போலீசாரை நியமனம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
பெண் போலீசார்:
மக்களவை கூட்டத்தொடர் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நேரடியாக நடத்தப்படாமல் இருந்தது. காணொளி வாயிலாக கடந்த ஆண்டு முதல் அமைச்சர்கள் கூட்டம் நடந்தது. நடப்பாண்டில் கொரோனா பரவல் அச்சம் நீடிக்கும் நிலையிலும், தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் கூட்டம் நடந்து வருகிறது. தொடர்ந்து பல துறை தொடர்பான கேள்விகளும் மக்களவையில் எழுப்பப்பட்டு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மூலம் பதில் அளிக்கப்பட்டு வருகிறது.
ரூபாய் நோட்டுகளில் சுபாஷ் சந்திர போஸ் படம் இடம்பெறுமா? மத்திய அரசு விளக்கம்!
நாட்டின் தற்போதைய நிலவரம் பற்றிய விவாதங்கள் நடைபெற்றது. கொரோனா 3ம் அலை தடுப்பு முன்னேற்பாடு பணிகள் பற்றிய ஆலோசனைகள் நடைபெற்றது. தொடர்ந்து கொரோனா தொற்று பரவல் பாதிப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஊரடங்கு காலத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பான விவாதங்கள் நடந்தது. நாட்டில் பெண் போலீஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை குறித்து கார்த்தி சிதம்பரம் மக்களவையில் கேள்வி எழுப்பினார்.
TN Job “FB Group” Join Now
அதற்கு மத்திய உள்துறை அமைச்கம் பதில் அளித்துள்ளது. அதில், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் 3 பெண் எஸ்.ஐ.க்கள், 10 பெண் போலீசாரை பணியமர்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண் போலீசாரின் காலியாக உள்ள இடங்களில் பெண் போலீசாரை கூடுதலாக பணியமர்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் காவல் நிலையத்தில் 24 மணி நேரமும் பெண்களுக்கான உதவி மையத்தை செயல்படுத்தலாம் என்றும், தற்போது பணியில் உள்ள 20,91,488 காவலர்களில் 2,15,504 பேர் பெண் காவலர்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.