பிஎச்.டி மாணவர்களுக்கு மாத உதவித்தொகை – கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவிப்பு!!
தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் பிஎச்.டி (ஆராய்ச்சி படிப்பு) பயிலும் மாணவர்கள் அரசு சார்பில் வழங்கப்படும் மாத உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவித்து உள்ளது. மேலும் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களும் இதற்கு தகுதியானவர்களே எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாத உதவித்தொகை:
தமிழக அரசு சார்பில் ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாணவர்ளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் நடப்பு கல்வி ஆண்டுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குநரகம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள அறிவிப்பில், https://www.tndce.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாணவர்கள் மாத உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
பிப்ரவரி 10ஆம் தேதி இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் – சென்னை தலைமையகம் அறிவிப்பு!!
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களில் அவரவர் கல்லூரி நிர்வாகி மற்றும் முதல்வருடன் கையொப்பம் பெற்று, கல்லூரி கல்வி இயக்குநர், ஈவெகி சம்பத் மாளிகை, கல்லூரி சாலை, சென்னை-6 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஜனவரி 29ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தகுதிகள்:
ஆராய்ச்சி படிப்பில் உதவித்தொகை பெற, அந்த மாணவர் 2020ஆம் ஆண்டு ஜனவரி – டிசம்பர் மாதங்களுக்குள் படிப்பில் சேர்ந்தவராக இருக்க வேண்டும். எம்.பில் மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் 60% மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும்.
ஆசிரியர் காலிப்பணியிட தேர்வு அட்டவணை வெளியீடு எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!!
மேலும் வேறு எந்த ஆராய்ச்சி நிதி பெறுபவராகவோ அல்லது பகுதி நேர ஆய்வாளராகவோ இருக்க கூடாது. இந்த திட்டத்தில் தேர்வாகும் 120 மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் என மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்