தமிழக இளைஞர்களுக்கு அரசின் சூப்பர் அறிவிப்பு – மாத உதவித்தொகை வழங்கல்! விண்ணப்பம் வரவேற்பு!
தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி கொடுக்க தேவையான பல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், வேலைவாய்ப்பற்றவர்களுக்கு மாத உதவித்தொகை வழங்குவது குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
உதவித்தொகை:
தமிழக அரசு இளைஞர்களுக்கு அரசு துறைகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு அறிவிப்புகளை வெளியிட்டு, பணியாளர்களை தேர்வு செய்து வருகிறது. இதைத்தவிர பல கோடி அளவிற்கு அந்நிய முதலீடுகளை தமிழகத்தில் வரவேற்று, அதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெற உதவி செய்து வருகிறது. இதைத்தவிர பல்வேறு காரணங்களுக்காக வேலைவாய்ப்புகள் எதுவும் இல்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு அரசு சார்பில் மாத உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்ட தனியார் பள்ளி விவகாரம் – உயர்நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!
Follow our Instagram for more Latest Updates
இதன் படி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்த, பதிவை தவறாமல் புதுப்பித்து வரும் இளைஞர்களுக்கு அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட நபரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.72,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், வயது 40 க்குள் இருக்க வேண்டும். தகுதி பெரும் நபர்கள் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகையை பெறுவார்கள். மாற்றுத்திறனாளிகள் மட்டும் 10 ஆண்டுகள் வரை உதவித்தொகை பெறுவார்கள்.
10ம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு மாதம் ரூ.200, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மாதம் ரூ. 300, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 என்ற விகிதத்தில் உதவித்தொகை அளிக்கப்படும். இந்த உதவித்தொகையினை பெற தகுதி உள்ளவர்கள் தகுந்த கல்வி சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் தங்கள் விண்ணப்பங்களை தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை மார்ச் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட தொழில் நெறி வழி காட்டும் மைய உதவி இயக்குனர் ம.பேச்சியம்மாள் அறிவித்துள்ளார்.