தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இனி WFH.. மாத உதவித்தொகை ரூ.1,500 ஆக உயர்வு – முதல்வர் அதிரடி!
தமிழக அரசு, மாற்றுத்திறனாளிகளுக்கு மாத மாதம் அளிக்கும் ஓய்வூதிய தொகையை ஜனவரி 1 முதல் உயர்த்தி வழங்க உள்ளதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முதல்வர் அறிவிப்பு:
தமிழக அரசு வயது மூத்தவர்கள், ஆதரவற்றவர்கள், கணவனை இழந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களின் வாழ்வாதாரத்திற்காக உதவும் வகையில் மாதம் குறிப்பிட்ட அளவு உதவித்தொகையை அளித்து வருகிறது. தற்போதைய அரசு இது போன்றவர்களின் நல்வாழ்விற்காக புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது. அதுபோல், தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு என்று புதிய அறிவிப்பை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார்.
வெளியாகிய குஷியான தகவல்.. தமிழகத்தில் பொங்கல் பரிசாக ரூ.2,500? – ரேஷன் அட்டைதாரர்கள் எதிர்பார்ப்பு!
Exams Daily Mobile App Download
அந்த அறிவிப்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு இதுவரை அளித்து வந்த மாதம் ரூ.1,000 ஓய்வூதிய உதவித்தொகையானது, ஜனவரி 1 முதல் ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்க உள்ளதாகவும், மேலும், மாற்றுத்திறனாளிகள் அலுவலகங்களுக்கு சென்று வேலை செய்யாமல் வீட்டில் இருந்து பணியாற்ற கூடிய சூழலை உருவாக்க உள்ளதாகவும் இந்த நடைமுறை ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வர உள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பு மாற்றுத்திறனாளிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.