தமிழகத்தில் இனி மழைக்கால விடுமுறை? – அரசுக்கு எழுந்து வரும் கோரிக்கை!
நாடு முழுவதும் பருவ மழை காலம் அதிக பாதிப்பு, இருந்தாலும் அதிக அளவில் இந்த மழையால் பாதிக்கப்படுவது பள்ளி குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் தான். இதற்கான புதிய திட்டம் ஒன்று கோரிக்கையாக எழுந்து வருகிறது.
மழைக்கால விடுமுறை:
மற்ற மாதங்களை விட பருவ மழைக்காலம் தான் மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகிறார்கள்.100 டிகிரி வெப்பத்தை தாங்கிக்கொண்டு வேலை செய்யும் சாமானியர்கள் கூட மழையால் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தனது அன்றாட வாழ்வை கடினமாக கழிக்கின்றனர். இதை போலவே பள்ளி மாணவர்களுக்கும் மழைக்காலம் வந்துவிட்டாலே ஜாலி தான்.
Exams Daily Mobile App Download
தினமும் மழைபெய்ய வேண்டும் என்று சில குறும்புக்கார மாணவர்கள் கடவுளை வேண்டிக் கொள்வதும் நடக்கும் விஷயம் தான். ஏனென்றால் தொடர் மழை பெய்தால் சிரமம் மற்றும் பாதுகாப்பு கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுவிடும். ஆனால் விடுமுறை முடிந்து மாணவர்கள் மொத்தமாக சேர்த்து வைத்து படிக்க வேண்டியதை நினைத்து கவலைப்படமாட்டார்கள்.
Follow our Instagram for more Latest Updates
இந்த சிக்கலில் மாட்டிக் கொள்வது ஆசிரியரால் தான், எதிர்பாராத மழை விடுமுறையால் மாணவர்களுக்கு முடிக்க வேண்டிய பாடத்திட்டங்களை அவசர அவசரமாக முடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால், இனி இதுபோன்ற நிலைகளை தவிர்ப்பதற்கு கோடை விடுமுறை நாட்களை குறைத்து, மழைக்கால விடுமுறை என்று புதிதாக அரசு அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் அரசுக்கு எழுந்து வருகிறது.