தமிழகத்தில் குரங்கு அம்மை அச்சம் எதிரொலி – முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள உத்தரவு!
உலக நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. இதனை தடுக்க தமிழகத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
குரங்கு அம்மை நோய்:
உலகம் முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் முதன் முதலில் சீனாவில் இருந்து பரவ தொடங்கியது. சீனாவை தொடர்ந்து மற்ற நாடுகளுக்கும் விரைவாக பரவி பாதிப்பையும், உயிரிழப்பையும் அதிகப்படுத்தியது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாட்டு அரசுகளும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தது. மேலும் பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றவும், கிருமி நாசினிகளை பயன்படுத்தவும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியது. இதனை பின்பற்றி மக்கள் தடுப்பு பணிகளுக்கு அரசுடன் சேர்ந்து ஒத்துழைப்பு அளித்தனர்.
அதனை தொடர்ந்து கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு முதல் கட்டமாக 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு செலுத்தும் பணி தொடங்கியது. இந்த தடுப்பூசிகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்று தாக்கத்தில் இருந்து மக்களை மீட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கைகள் குறைய ஆரம்பித்ததும் அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது. இதனையடுத்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்த நேரத்தில் ஆப்பிரிக்க நாடுகளில் பரவக்கூடிய குரங்கு அம்மை நோய் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி வருகிறது. அதனால் இந்திய மாநிலம் தமிழகத்தில் தடுப்பு பணிகளை மேற்கொள்ள முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
Exams Daily Mobile App Download
இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார். அவர், வெளிநாட்டில் இருந்து வருபவர்களிடம் குரங்கு அம்மை நோய் தொடர்பான சோதனை நடைபெற உள்ளது. தற்போது கொரோனாவின் BA A4 தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதனால் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்.நோய் தடுப்பு வழிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் சில இடத்தில் கொரோனா கிளஸ்டர் உருவாகிறது. அதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.