இந்தியாவில் அதிகரிக்கும் குரங்கு அம்மை நோய் பரவல் – மாநில அரசு நடவடிக்கை!
உலக நாடுகளில் அதிக அளவில் மக்களால் பேசப்பட்டு வரும் குரங்கு அம்மை நோய் தற்போது இந்தியாவிலும் அச்சுறுத்தும் நோயாக உருவெடுத்துள்ளதால் மாநில அரசு சிகிச்சை அளிப்பது குறித்து சில தகவலைகளை வெளியிட்டுள்ளது.
குரங்கு அம்மை பரவல்
உலகம் முழுவதும் கொரோனா பரவல் தற்போது குறைந்து வரும் வேளையில் குரங்கு அம்மை நோய் பரவல் அதிகரித்த வண்ணமாக உள்ளது. இதுவரை 58 நாடுகளில் இந்த குரங்கு அம்மையின் தாக்கம் அதிகரித்து பரவியுள்ளது. உலகளவில் பார்க்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு வெகு விரைவாக பரவி வரும் குரங்கு அம்மை நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
TNPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – ரூ.71900 வரை சம்பளம்! முழு விவரம்!
இந்த நிலையில் குரங்கு அம்மையின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. அதாவது இந்தியாவின் தலை நகரமான புது டெல்லியில் இரண்டு பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு முன்னதாகவே உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில், இன்று டெல்லி நைஜீரிய நாட்டை சேர்ந்த ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவில் இதுவரை இந்த நோய் தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
Exams Daily Mobile App Download
அதுபோல முதன் முறையாக (ஜூலை 14) அன்று இந்தியாவில் ஒருவருக்கு அதாவது ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரள மாநிலம் வயநாடு வந்தடைந்த 35 வயது நபர் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டதை அடுத்து மேலும், 4 பேர் கேரளா மாநிலத்தில் பாதித்துள்ளார்கள். இதனால் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 5 ஆகவும் உயர்ந்துள்ளது. எனவே டெல்லி அரசு இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கும் விதமாக டெல்லியில் உள்ள 3 தனியார் மருத்துவமனைகளில் தலா 10 அறைகள் அமைத்து, அதில் 5 அறையை குரங்கு அம்மை அறிகுறி உள்ளவர்களுக்கும், 5 அறையை உறுதி செய்யப்பட்டவர்களுக்காகவும் ஒதுக்கீடு செய்யுமாறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.