இந்தியாவில் நாளுக்கு நாள் வீரியமெடுக்கும் குரங்கம்மை – 8 பேர் பாதிப்பு!
வெளிநாடுகளில் மிகவும் வேகமாக பரவி வரும் குரங்கம்மை நோய் தொற்று தற்போது இந்தியாவிலும் வேகமெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இது வரைக்கும் 8 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
குரங்கம்மை:
இந்தியாவில் கொரோனா பரவலை தொடர்ந்து குரங்கம்மை நோய் தொற்றும் வேகமாக பரவி கொண்டிருக்கிறது. அத்துடன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 55 நாடுகளில் குரங்கம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. இதனால், அனைத்து நாடுகளிலும் குரங்கம்மை நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே முதன் முதலாக கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு தான் குரங்கு காய்ச்சலின் நோய் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
அதாவது, கடந்த ஜூலை 14 ஆம் தேதி அமீரக நாட்டிலிருந்து கேரளா வந்த ஒருவருக்கு குரங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கேரளாவில் மட்டுமே மேலும் மூன்று பேருக்கு குரங்கு காய்ச்சலின் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கடந்த ஜூலை 27 ஆம் தேதி கேரளாவிற்கு வந்த 30 வயது நபருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கேரளாவில் மட்டுமே குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ‘பால் ஆதார் கார்டு’ – நாடு முழுவதும் விநியோகிக்க நடவடிக்கை
இது மட்டுமல்லாமல் ஏற்கனவே டெல்லியிலும் இரண்டு பேருக்கு குரங்கம்மை நோய் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 35 வயது வெளிநாட்டவருக்கும் குரங்கம்மை நோய் அறிகுறிகள் தென்பட்டுள்ளது. இதனால், டெல்லியில் குரங்கம்மை நோய் பாதித்தவரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இதனால், இந்தியாவில் மட்டுமே 8 பேருக்கு குரங்கம்மை நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், குரங்கு காய்ச்சல் மிகவும் வேகமாக பரவுவதால் பொதுமக்களை கவனமாக இருக்கும்படி சுகாதாரத்துறை எச்சரித்து வருகிறது.