குப்பைகளை தரம் பிரித்து கொடுத்தால் பணம்? “நெகிழி இல்லா தமிழகம்” திட்டம்!
நெகிழி இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என தமிழக முதல்வரின் அறிவிப்பின் படி கிராமப்பகுதிகளில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நெகிழி இல்லா தமிழகம்:
நெகிழி இல்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கிலும், சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கவும் தமிழக அரசு சார்பில் மீண்டும் மஞ்சள் பைகளை பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கும் நோக்கில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன் படி கிராமப்பகுதிகளில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாராயணதேவன்பட்டி ஊராட்சியில் இந்த திட்டமானது சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
இந்த திட்டத்தின் படி பொதுமக்கள் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து இதில் பிளாஸ்டிக் பை, எண்ணெய் கவர், பால் கவர், பிஸ்கட் கவர், மசாலா பாக்கெட் கவர் ஆகிய பிளாஸ்டிக் பொருட்களை பிரித்து கொடுத்தால் ஊராட்சி சார்பில் ஒரு கிலோ 8 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஊராட்சிப்பகுதி முழுவதும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு – இலவச மாதிரித்தேர்வு! மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
இந்த திட்டத்தை மண்டல துணைவட்டார வளர்ச்சி அலுவலர் பால்பாண்டியன், ஊராட்சி துணைத்தலைவர் மகேந்திரன், ஊராட்சி செயலர் ஈஸ்வரன் போன்ற அதிகாரிகள் குப்பைகளை பிரித்து எடுப்பதில் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த திட்டத்திற்கு ‘குப்பைக்கு துட்டு’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து ஊராட்சித் தலைவர் பொன்னுத்தாய் கூறுகையில், அரசின் இந்த திட்டம் மூலமாக வீதிகளிலும், சாக்கடைகளிலும் பிளாஸ்டிக் குப்பைகள் வீசுவது நின்றுவிடும். இந்த திட்டம் மூலமாக பணம் கிடைப்பதால் மக்கள் ஆர்வத்துடன் அவற்றை வீடு தேடி வரும் தூய்மை காவலரிடம் ஒப்படைக்கின்றனர். இதன் மூலம் எங்க கிராமம் நெகிழி இல்லா கிராமமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.