தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – உதவித்தொகை நுழைவுத்தேர்வு!
தமிழகத்தில் 9 – 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2022 – 23ம் ஆண்டுக்கான உல்லாஸ் அறக்கட்டளை நிறுவனத்தின் சார்பாக வழங்கப்படும் உதவித்தொகை குறித்து பள்ளிக் கல்வி ஆணையர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
உதவித்தொகை:
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலக் கூடிய ஏழை எளிய மக்களுக்கு அரசு சார்பாக கல்விக்கு உதவும் வகையில் மாதந்தோறும் அல்லது வருடாந்திர அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர்கள், சிறுபான்மை மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகைகள் மூலம் மாணவர்கள் இடை நிற்றல் இன்றி கல்வியை தொடர்கின்றனர். இந்த உதவித்தொகை திட்டத்தின் கீழ் நிபந்தனைகளின் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மீண்டும் அலுவலக ஊழியர்களுக்கு அமலாகும் வீட்டிலிருந்து வேலை முறை – கொரோனா பாதிப்புகள் எதிரொலி!
இந்த நிலையில் அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி சேரும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதந்தோறும் 1000 ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது உல்லாஸ் அறக்கட்டளை நிறுவனத்தின் சார்பாக உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதில் உல்லாஸ் என்ற அறக்கட்டளை சார்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு மூலம் உயர்கல்வி பயில்வதற்கான உதவித்தொகை வழங்க அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், இதன் தொடர்ச்சியாக அனைத்து “மாவட்டங்களிலும் அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு THE TOUCH SOIL என்ற நிகழ்ச்சி வார இறுதி நாட்களில் நடத்தப்பட்டு வருவதாகவும் இத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது, தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிய வகையிலும், கிராமப்புற மற்றும் சரகப்பகுதி மாணவ / மாணவியர்கள் பெருமளவில் இச்சேவையைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையிலும் மாணவர்களுக்கு ஆலோசனைகளும் வழிகாட்டலும் தேவையான இடங்களைக் கண்டறிந்து அந்த பகுதிகளில் அதிகமான
நிகழ்ச்சிகளை நடத்திடவும் உல்லாஸ் அறக்கட்டளை நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
எனவே, 2022 – 2023 ஆம் கல்வியாண்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்கள் கல்வி உதவித்தொகை வழங்கும் பொருட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் கலந்தாலோசித்து பள்ளிப் பணிகள் பாதிக்காதவாறு உரிய தேர்வினை நடத்திடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.