தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் – ஊக்கத்தொகை நிறுத்தம்? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று கல்வி கற்பிக்கும் நோக்கில் தன்னார்வலர்களை கொண்டு இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தில் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளது.
இல்லம் தேடி கல்வி திட்டம்:
தமிழகத்தில் 1 – 10ம் வகுப்பு வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் கடந்த 14ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. தற்போது வழக்கம் போல வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு புதிய திட்டங்கள் அந்த வகையில் கடந்த வருடம் நிலவிய கொரோனா பெருந்தொற்றின் போது அரசு பள்ளி மாணவர்களை கருத்தில் கொண்டு அரசு கல்வி தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் மூலம் ஏழை எளிய மாணவர்கள் ஊரடங்கு காலத்திலும் வீட்டில் இருந்து கல்வி பயின்று வந்தனர்.
தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 20) ‘இந்த’ பகுதிகளில் மின்தடை – மின்வாரியம் அறிவிப்பு!
இந்த நிலையில் மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் இடைவெளியை குறைக்கும் நோக்கிலும் இல்லம் தேடி சென்று அவர்களுக்கு கல்வியை கற்று தரும் நோக்கிலும் தன்னார்வலர்களுக்கு உதவும் இல்லம் தேடி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டம் 2021 அக்டோபர் மாதம் கொண்டு வரப்பட்டது. முதலில் 12 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட இத்திட்டம் பின்னர் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து மேலும் 6 மாதங்களுக்கு இத்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதில் அரசு மற்றும் தனியார் பள்ளியில் பயில கூடிய அனைத்து மாணவர்களும் இந்த இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் கல்வி பயிலலாம். இத்திட்டத்தில் பணியாற்ற கூடிய தன்னார்வலர்களுக்கு மாதம்1,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. தற்போது இந்த ஊக்கத்தொகை மே மாதத்தில் இருந்து தன்னார்வலர்களுக்கு வழங்கப்படவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளது. அவற்றை குறித்த காலத்தில் வழங்காமல் தாமதம் செய்வது நியாயமில்லை அதனால் ஊக்க தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்