தமிழக பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – கல்வி ஊக்கத்தொகை திட்டம்!
தமிழகத்தில் கல்வி ஊக்கத்தொகை இல்லம் தேடி கல்வி, மற்றும் எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், போன்ற சிறப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை சிறப்பாக செயல்படுத்தும் நோக்கில் கல்வி ஊக்கத்தொகை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஊக்கத்தொகை:
தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் உள்ள திமுக தலைமையிலான அரசு அனைத்து துறைகளிலும் புதுமைகளை புகுத்தி வருகிறது. மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு புது திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் மற்ற துறைகளை தொடர்ந்து கல்விதுறையிலும் பல மாற்றங்களும் புதுமைகளும் கொண்டு வரப்பட்டுள்ளது. அரசின் முயற்சியால் கடந்த கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து தக்க வைக்க அரசு மேலும் முயற்சித்து வருகிறது. அதாவது இந்த கொரோனா கால கட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு கல்வி தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – வலுக்கும் கோரிக்கை! அறிவிப்பு வெளியாகுமா?
மேலும் “இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், என் பள்ளி என் பெருமை” போன்ற பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தும் நோக்கில் , தமிழ்நாடு கல்வி ஊக்கத்தொகை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சேர ஆர்வமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் முக்கிய பணி அரசின் முன்னோடித் திட்டங்களை செயல்படுத்த துணைபுரிய வேண்டும். மேலும் அரசுப் பள்ளி தேவைகளை அடையாளம் காணுதல், கல்வித் தேவைகளை நிறைவேற்ற வேண்டும்.
ExamsDaily Mobile App Download
மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு டிஜிட்டல் கருவிகள் துணையுடன் உதவ வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் சரளமாக பேச, எழுத, படிக்கத் தெரிந்து இருக்க வேண்டும் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணிக்காலமானது 2022 முதல் 2024 வரை ஆகும். மேற்கண்ட தகுதிகள் உள்ளவர்கள் ஜூன் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்காலத்தில் தொடர் பயிற்சிகள் வழங்கப்படும் பணிகாலத்தை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு அரசு சார்பில் அனுபவ சான்றிதழ் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.