ரூ.34,800/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு..!
சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் கீழ் இயங்கி வரும் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகத்தில் (WCCB) இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் காலியாக உள்ள Stenographer-I, Stenographer-II, Upper Division Clerk, Lower Division Clerk பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் கீழ் இயங்கி வரும் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகத்தில் (WCCB) காலியாக உள்ள Stenographer-I பணிக்கு 02 இடம் விதமும், Stenographer-II பணிக்கு 01 இடம் விதமும், Upper Division Clerk பணிக்கு 01 இடம் விதமும், Lower Division Clerk பணிக்கு 02 இடம் விதமும் என மொத்தமாக 06 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் ஏதேனும் ஒரு Degree-யை படித்தவராக இருக்க வேண்டும்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு அல்லது மாநில அரசு அல்லது யூனியன் பிரதேசங்களில் Parent Cadre / Department-ல் ஒத்த பதவிகளில் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் தேர்வு செய்யும் பணிக்கு தகுந்தாற்போல் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தபட்சம் 5 வருடம் முதல் அதிகபட்சம் 10 வருடம் வரை கட்டாயம் குறிப்பிட்டுள்ள ஊதிய அளவின் படி ஊதியம் பெறப்படும் பதவிகளில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவராக இருப்பது அவசியமாகும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு அதிகபட்சம் 56 என முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அணியின் அடிப்படையில் ரூ.34,800/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 6.5.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்டுகிறர்கள்.