கொரோனா பணியாளர்களுக்கு புதிய காப்பீடு திட்டம் – மத்திய அரசு தகவல்!!
கொரோனாவுக்கு எதிராக போராடும் சுகாதார பணியாளர்கள் நோய்த்தொற்று காரணமாக இறந்தால் அவர்களுக்கு பிரதமர் மோடியின் காப்பீடு திட்டத்தின் கீழ் 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.
காப்பீடு திட்டம்:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,73,810 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பில் 78 சதவீதம் மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், டெல்லி, கர்நாடகா, கேரளா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பதிவாகியுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் ஒரு நாளில் 68,631 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எந்த அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறதோ, அதே வேகத்தில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமடைந்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்தியாவில் இதுவரை 12,38,52,566 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிரான போரில் முன்னிலையில் இருக்கும் மருத்துவர்களுக்கும், சுகாதர பணியாளர்களுக்கும் உதவும் விதத்தில் பிரதமர் மோடியின் காப்பீடு செயல்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நலத்திட்ட உதவி முதன் முதலாக கொரோனா தாக்கம் துவங்கிய கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் கொரோனாவுக்கு எதிராக போராடும் பணியாளர்கள், இறக்கும் சூழல் ஏற்பட்டால் அவர்களது குடும்பங்களுக்கு உதவும் விதத்தில் 50 லட்சம் ரூபாய் காப்பீடாக வழங்கப்படுகிறது.
ஐடி துறையில் 72,000 பேருக்கு வேலைவாய்ப்பு – டாப் 3 நிறுவனங்கள்!!
இந்த காப்பீடு தொகை இதுவரை 287 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி வரை இந்த நலத்திட்ட உதவி மூன்றாவது முறையாக நீடிக்கப்பட்டது. இதன்படி தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள பிரதமர் மோடியின் காப்பீட்டு திட்டம் ஏப்ரல் 24 ஆம் தேதி வரை செயல்படுத்தப்படும். அதன் பின்பாக கொரோனா போராளிகளுக்கு புதிய காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.