மும்பை மெட்ரோ ரயில் பாதைகள் – ஜனவரி 19 அன்று பிரதமர் மோடி திறந்து வைப்பு!!
மும்பையில் புதிதாக கட்டப்பட்டுள்ள 2 மெட்ரோ ரயில் பாதைகளை பிரதமர் மோடி ஜனவரி 19 ஆம் தேதியன்று திறந்து வைக்கிறார். இதன் மூலம், மும்பை மாநகரத்தில் போக்குவரத்துக்கு நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
மெட்ரோ சேவை
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் அதிகளவிலான மக்கள் பயனடைவதுடன், போக்குவரத்து நெரிசலும் குறைக்கப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்தும் விதமாக, மும்பை மாநகராட்சியின் லிங்க் ரோடு மற்றும் வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ஹைவே பகுதியில் கூடுதலாக 2 மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பாதைகள் வரும் ஜனவரி 19 ஆம் தேதி முதல் பயன்பட்டு வர இருக்கிறது.
பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் நீட்டிப்பு – அமித் ஷா அறிவிப்பு!!
Follow our Instagram for more Latest Updates
அந்த வகையில், மும்பை மெட்ரோ ரயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதை 2A மற்றும் 7 ஆம் கட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 19 ஆம் தேதியன்று துவக்கி வைக்கிறார். கிட்டத்தட்ட 18.6 கிமீ நீளமுள்ள மெட்ரோ பாதை 2A, தஹிசர் இ மற்றும் டிஎன் நகர் மற்றும் 16.5 கிமீ நீளமுள்ள மெட்ரோ பாதை 7 அந்தேரி கிழக்கு மற்றும் தஹிசார் இ பகுதிகளை இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரயில் பாதைகளை அமைக்க ரூ.12,600 கோடி செலவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.