தமிழகத்தில் 10, 12ம் வகுப்புகளுக்கு ஆன்லைனில் மாதிரி தேர்வுகள் – பள்ளிக்கல்வித்துறை திட்டம்!!
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதிரி தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.
மாதிரி தேர்வுகள்:
தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கியது. இதனையடுத்து மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு வர தொடங்கி உள்ளனர். ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக மாணவர்கள் பாடங்களை கற்று வந்தனர். எனவே மாணவர்கள் வீட்டில் இருந்து கற்றறிந்த பாடங்களின் திறனை பரிசோதிக்கும் வகையில் மாதிரி தேர்வுகளை ஆன்லைனில் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது.
இந்த அறிகுறிகள் இருந்தால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் – கல்வித்துறை அறிவுறுத்தல்!!
அதன்படி பள்ளிகளில் உள்ள ஹைடெக் லேப் மூலம் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இதற்காக மாணவர்களை தனித்தனி குழுக்களாக பிரித்து, ஒரு நாளைக்கு 3 குழு வீதம் 4 நாட்களுக்கு தேர்வு நடத்த வேண்டும். ஒரு குழு மாணவர்கள் தேர்வினை முடித்தவுடன் ஆய்வகம் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட வேண்டும். மாணவர்கள் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை பின்பற்றி தேர்வில் பங்கேற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
முதல் & 2ம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு சுழற்சி முறை வகுப்புகள் – உயர்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை!!
மேலும் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களில் இருந்து மொத்தம் 120 வினாக்கள் (ஒரு பாடத்திற்கு 30 வினாக்கள்) கேட்கப்படும். கேள்விகளுக்கான விடைகள் கொடுக்கப்பட்ட ஆப்ஷன்களில் இருந்து தேர்ந்தெடுக்கும் வகையில் அமைந்திருக்கும் என பள்ளிக்கல்வித்துறை கூறி உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Super