PhonePe மூலம் மொபைல் ரீசார்ஜ் செய்தால் இனி கட்டணம் வசூலிக்கப்படும் – பயனர்கள் அதிர்ச்சி!
தற்போது பண பரிவர்த்தனைகள் அதிக அளவில் ஆன்லைன் மூலம் நடந்து வருகிறது. இந்நிலையில் 50 ரூபாய்க்கு மேல் மொபைல் ரீசார்ஜ் செய்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என PhonePe நிறுவனம் அறிவித்துள்ளது.
போன்பே:
தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் அனைத்தும் டிஜிட்டல் மாயமாகியுள்ளது. இதனால் பண பரிவர்த்தனைகள் அதிக அளவில் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. மேலும் ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்பவர்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் கேஷ்பேக் வழங்கப்பட்டு வருகிறது. இதில் பயனர்கள் தொடர்ந்து ஆன்லைன் பணபரிவர்த்தனையை பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய போன்பே, கூகுள் பே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் நவ.1ம் தேதி முதல் பள்ளி விடுதிகள் திறப்பு – வழிகாட்டுதல்கள் வெளியீடு!
தற்போதைய நிலவரப்படி ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளில் முக்கிய செயலியான போன்பே 50 ரூபாய்க்கு மேல் மொபைல் ரீசார்ஜ் செய்பவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. UPI பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்யப்படும் பல செயலிகள் இயங்கி வரும் நிலையில் போன்பே கட்டணம் வசூலிக்கும் முறையினை தொடங்கியுள்ளது. மேலும் கிரெடிட் கார்டுகள் மூலம் செலுத்தப்படும் கட்டணங்களுக்கு பிராசஸிங் கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தீபாவளி சலுகை: குழந்தைகளுக்கு ஆர்கானிக் ஆடைகள், தமிழ்த் தறி தொகுப்பு – முதல்வர் அறிவிப்பு!
இது குறித்து ரூ.50க்கு குறைவான மொபைல் ரீசார்ஜ்களுக்கு கட்டணம் கிடையாது. ரூ.50 முதல் ரூ.100 வரையிலான மொபைல் ரீசார்ஜ்களுக்கு 1 ரூபாய், ரூ.100 க்கு மேல் 2 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஆன்லைன் தளங்களில் கட்டணம் வசூலிக்கும் முதல் நிறுவனம் நாங்கள் கிடையாது. பல நிறுவனங்கள் ஏற்கனவே டிஜிட்டல் தளத்தில் சிறிய அளவிலான தொகையை பிராசஸிங் கட்டணமாக வசூலித்து வருகிறது. நாங்கள் கிரெடிட் கார்டு மூலம் நடைபெறும் மொபைல் ரீசார்ஜ்களுக்கு மட்டும் தான் கட்டணம் வசூலிக்கிறோம் என நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இது பயனர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.