தமிழகத்தில் வாக்குப்பதிவின் போது செல்போன் கொண்டு செல்ல தடை – தேர்தல் அதிகாரி தகவல்!!

0
தமிழகத்தில் வாக்குப்பதிவின் போது செல்போன் கொண்டு செல்ல தடை - தேர்தல் அதிகாரி தகவல்!!
தமிழகத்தில் வாக்குப்பதிவின் போது செல்போன் கொண்டு செல்ல தடை - தேர்தல் அதிகாரி தகவல்!!
தமிழகத்தில் வாக்குப்பதிவின் போது செல்போன் கொண்டு செல்ல தடை – தேர்தல் அதிகாரி தகவல்!!

தமிழகத்தில் வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் மொபைல் போன்களை எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் மீண்டுமாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் நாளை (06-04-2021) சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான பரப்புரைகள் நேற்றுடன் (04-04-2021) முடிவடைந்தது. தேர்தலுக்கான வாக்குச்சாவடிகளும் தயார் நிலையில் உள்ளது. தேர்தலில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக இலவச கார் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

முன்னதாக வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வாக்களிக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலர் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் வாக்குச்சாவடிக்குள் பொதுமக்கள் செல்போன் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தேர்தலுக்கு பின்னர் ஊரடங்கு? சுகாதாரத்துறை செயலர் விளக்கம்!

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘ஓட்டுப்பதிவை கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறை தலைமை செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி வெப்கேமரா பொருத்தப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளிலும் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வாக்குச்சாவடிகளில் ஓட்டளிக்க செல்லும் போது செல்போன்களை கொண்டு செல்ல கூடாது’ என தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!