எம்எம் அப்துல்லா மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு – தேர்தல் அதிகாரி அறிவிப்பு!
மாநிலங்களவை உறுப்பினருக்கான காலியிடத்தை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் எம்.எம் அப்துல்லா போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்.
மாநிலங்களவை தேர்தல்:
தமிழகத்தை சேர்ந்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முகம்மது ஜான் கடந்த மார்ச் மாதம் காலமானார். இதற்கு முன்னதாக காலியாக இருந்த 2 இடங்களையும் சேர்த்து மொத்தம் 3 மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாக இருந்தது. இதில் ஒரு இடத்துக்கு மட்டும் செப்டம்பர் 13ம் தேதி அன்று இடைத்தேர்தல் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டது. திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டியிட உள்ளதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்தார்.
IPL 2021 அப்டேட்ஸ் : பயிற்சியின் போது மாஸ் கட்டிய சின்ன தல! குஷியில் ரசிகர்கள்!
இது தவிர ந.அக்னி ஸ்ரீராமச்சந்திரன், கு.பத்மராஜன், கோ.மதிவாணன் ஆகிய 3 சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக மனுதாக்கல் செய்த்தனர். அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு யாரும் போட்டியிடவில்லை. இந்நிலையில், செப்டம்பர் 1ம் தேதி வேட்பு மனுக்கள் தொடர்பான பரிசீலினை செய்யப்பட்டது. ஒரு வேட்பாளரை 10 எம்எல்ஏக்கள் முன்மொழிய வேண்டும். சுயேச்சை வேட்பாளர்களுக்கு முன்மொழிய வேட்பாளர்கள் இல்லை.
கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய தடை? சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
இதனால், 3 சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. திமுக வேட்பாளர் எம்.எம்.அப்துல்லாவின் வேட்பு மனு மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி சீனிவாசன் அறிவித்தார். மேலும், தேர்தல் நடத்தும் அதிகாரி சீனிவாசன் மாநிலங்களவை எம்.பி.யாக திமுக வேட்பாளர் அப்துல்லா போட்டியின்றி தேர்வானதாக அதிகாரப்பூரமாக அறிவித்துள்ளார். இதற்கான சான்றிதழையும் அப்துல்லாவிடம் வழங்கினார். எம்எம் அப்துல்லா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டதன் மூலம் மாநிலங்களவையில் திமுகவின் உறுப்பினர்களின் பலம் 8 ஆக உயர்ந்துள்ளது.