தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு? முக ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!!
தமிழகத்தில் பெருகி வரும் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி முக ஸ்டாலின் அவர்கள் உயர்மட்ட அலுவலர்களுடன் இன்று (மே 4) ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
கொரோனா ஆலோசனை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஒரே நாளில் தமிழகத்தில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தவிர 100க்கும் மேற்பட்ட நபர்கள் பலியாகியுள்ளனர். இதன் காரணமாக மாநிலம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களுடன், தமிழக தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன், சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று (மே 3) ஆலோசனை மேற்கொண்டனர்.
இன்று முதல் அமலுக்கு வரும் கடும் கொரோனா கட்டுப்பாடுகள் – மாநில அரசு அறிவிப்பு!!
அந்த ஆலோசனையின் போது, கொரோனா சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜன் உட்பட மருந்துகள் போன்றவை மக்களுக்கு தடை இல்லாமல் கிடைக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துமாறு ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன் பின்னர் மே மாதம் 6 ஆம் தேதி முதல், தற்போது நடைமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்பட்டு, புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மீண்டுமாக இன்று (மே 4) திமுக தலைவர் முக ஸ்டாலினுடன் தமிழக தலைமை செயலர், சுகாதாரத்துறை செயலர், வருவாய்த்துறை செயலர், பேரிடர் மேலாண்மை ஆணையர் உள்ளிட்டோர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக உயர்மட்ட அதிகரிகளுடன் நடத்தும் இந்த ஆலோசனை கூட்டம் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்