தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரம் – முக ஸ்டாலின் முக்கிய உத்தரவு!!

0
தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரம் - முக ஸ்டாலின் முக்கிய உத்தரவு!!
தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரம் - முக ஸ்டாலின் முக்கிய உத்தரவு!!
தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரம் – முக ஸ்டாலின் முக்கிய உத்தரவு!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சரிவர நடத்தப்படுகின்றதா? என்பது குறித்து முக ஸ்டாலின் அவர்கள் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதே போல் தரமான சிகிச்சையினை உறுதி செய்ய கண்காணிப்பு ஐஏஎஸ் அதிகாரிகளை மாவட்டங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா பரவல்

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாளுக்கு அதிகரித்து கொண்டே வருகின்றது. இந்த பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்று அரசு சார்பில் பகுதி நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தலைமைச் செயலாளர், காவல்துறை தலைவர், வருவாய்த்துறைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர், நிதித்துறைச் செயலாளர் மற்றும் உயரதிகாரிகளுடன் இன்று முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் உள்ள தட்டச்சு, கணினி பயிற்சி மையங்கள் திறப்பு – அரசுக்கு கோரிக்கை!!

இந்த ஆலோசனை கூட்டத்தில் மக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பது குறித்து அவர் கேட்டறிந்தார். அதே போல் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ வசதிகள், படுக்கை வசதிகள், ஆக்சிஜன் இருப்பு போன்றவை குறித்து அவர் கேட்டறிந்தார். மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

TN Job “FB  Group” Join Now

இதனை உறுதி செய்ய அனைத்து மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு ஐஏஎஸ் அதிகாரிகளை அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தால் அதனை எதிர்கொள்ள இப்போதே தயாராக இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!