“நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலில் இருந்து விலகும் மிர்ச்சி செந்தில்? அவரே சொன்ன விளக்கம்!
விஜய் டிவி “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலில் இருந்து மிர்ச்சி செந்தில் விலக இருப்பதாக வெளியான செய்தி குறித்து அவரே விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார்.
நாம் இருவர் நமக்கு இருவர்:
தமிழ் சின்னத்திரையில் பல முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. ஆனால் அதில் விஜய் டிவி சீரியல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அதில் முக்கியமான சீரியல் தான் “நாம் இருவர் நமக்கு இருவர்”. இந்த சீரியலில் ஹீரோவாக மிர்ச்சி செந்தில் மாயன், மாறன் என்ற இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக சரவணன் மீனாட்சி புகழ் மகாலட்சுமி நடித்து வந்தார்.
‘செம்பருத்தி’ ஷபானா, நடிகர் ஆர்யனுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு? ரசிகர்கள் ஷாக்!
ஆனால் அவர் சில காரணங்களால் சீரியலை விட்டு விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக அரண்மனைக்கிளி புகழ் மோனிஷா நடிக்க தொடங்கி இருக்கிறார். மேலும் கத்தி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ராஜு பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளதால் அவர் ஜெயிலில் இருப்பது போல காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சீரியலை விட்டு செந்தில் விலக இருப்பதாக செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. காரணம் ஜீ தமிழில் ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது.
அதில் செந்தில் நடுவராக கலந்து கொள்ள இருக்கிறார் என்ற செய்தியால் இந்த வதந்தி பரவ தொடங்கியது. ஆனால் அது குறித்து அவர் கூறுகையில், நான் சீரியலில் இருந்து விலக இருப்பதாக எந்த எண்ணமும் இல்லை. நான் விலக இருப்பதாக வெளியான செய்தி தவறானது என விளக்கம் அளித்து இருக்கிறார். இதனால் ரசிகர்கள் நிம்மதி அடைந்தாலும், இதே போல தான் விலக மாட்டேன் என மகாலட்சுமி சொன்னார். ஆனால் அவர் விலகி இருப்பதால் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.