TNPSC Group 2, 2A தேர்வெழுத உள்ளோர் கவனத்திற்கு – மைனஸ் மதிப்பெண் முறை வெளியீடு!

0
TNPSC Group 2, 2A தேர்வெழுத உள்ளோர் கவனத்திற்கு - மைனஸ் மதிப்பெண் முறை வெளியீடு!
TNPSC Group 2, 2A தேர்வெழுத உள்ளோர் கவனத்திற்கு - மைனஸ் மதிப்பெண் முறை வெளியீடு!
TNPSC Group 2, 2A தேர்வெழுத உள்ளோர் கவனத்திற்கு – மைனஸ் மதிப்பெண் முறை வெளியீடு!

குரூப்-2, குரூப்-2 ஏ தேர்வு வரும் மே 21 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வில் மைனஸ் மதிப்பெண் உள்ள காரணத்தினால் எதெற்கெல்லாம் மதிப்பெண் குறைக்கப்படும் என்பதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குரூப்-2, குரூப்-2 ஏ தேர்வு:

தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்காக ஒவ்வொரு ஆண்டும் குரூப்-2, குரூப்-2 ஏ, குரூப்-4 முதலிய தகுதி தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டும் தகுதித் தேர்வு நடைபெற இருக்கிறது. அதற்குரிய அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது. 5,529 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு நடைபெற இருக்கிறது. அந்த வகையில் குரூப் 2 தேர்வு மே 21ஆம் தேதி நடைபெற இருக்கிறது மற்றும் குரூப்-2 தகுதித் தேர்வு ஜூன் 24 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

SBI வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்நிலையில் தற்போது குரூப் 2 தேர்விற்கு மைனஸ் மதிப்பெண் உண்டு என டிஎன்பிஎஸ்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாளர்கள் தங்களுக்குரிய விடைத்தாள்களை பெற்ற பின்னர் தங்களின் விபரங்களை சரிபார்த்த பின்னரே அந்த விடைத்தாளை பயன்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தவறாக இருந்தால் பயன்படுத்துவதற்கு முன்னரே மாற்றிக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி தேர்வாளர்கள் தங்களுடைய விடைத்தாளிற்கு பதிலாக வேறு ஒருவரின் விடைத்தாளில் பதிவு எண்ணை எழுதி விட்டால் தேர்வாளர்களின் மொத்த மதிப்பில் இருந்து 2 மதிப்பெண் கழிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடை குறிப்பை ஷேடிங் செய்வதில் சரியான முறையை பின்பற்றா விட்டாலும் 2 மதிப்பெண்கள் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

விடைத்தாளில் புத்தகத்தின் எண்ணை சரியாக குறிப்பிடாமல் இருந்தாலும், விடைத்தாளில் அதற்கான இடத்தில் சரியாக எழுதாமல் இருந்தாலும் 5 மதிப்பெண் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கை ரேகை வைக்க முடியாத மாற்றுத் திறனாளிகள் மட்டும் கைரேகை வைக்க தேவையில்லை. மற்றவர்கள் கண்டிப்பாக கைரேகை வைக்க வேண்டும். கைரேகை வைக்காவிட்டாலும் 2 மதிப்பெண் கழிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த கேள்விக்காவது விடை தெரியாமல் விடையளிக்காமல் விட்டுவிட்டாலும் 2 மதிப்பெண் கழிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வாளர்கள் கவனமாக தேர்வு எழுதும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!