TNPSC குரூப் 4 & VAO தேர்விற்கு மைனஸ் மதிப்பெண்? முழு விவரம் இதோ!
தமிழகத்தில் நாளை (24.07.2022) குரூப் 4& VAO தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தற்போது குரூப் 4 தேர்வின் மைனஸ் மதிப்பெண்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
TNPSC குரூப் 4 & VAO :
தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் டைபிஸ்ட், ஸ்டெனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்களுக்கான TNPSC குரூப் 4 & VAO தேர்வு வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியானது. இதில் குரூப் 4 தேர்வின் கீழ் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 7,382 பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஏப்ரல் மாதம் இப்பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இதில் இந்தாண்டு தேர்வுக்கு சுமார் 21.85 லட்சம் பேர் 2022ம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.
குழந்தைகளை தாக்கும் குரங்கு அம்மை தொற்று – பீதியில் மக்கள்!
இந்த நிலையில் அறிவிக்கப்பட்டபடி நாளை மாநிலம் முழுவதும் பல்வேறு மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. இந்த குரூப் 4 தேர்வில் மைனஸ் மதிப்பெண்கள் உண்டு என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதன்படி தேர்வர்கள் அவர்களுக்கான விடைத்தாளுக்கு பதிலாக வேறு விடைத்தாள் பெற்றாலே ஆழ்ந்து விடைத்தாளில் தங்களின் பதிவு எண்ணை தவறாக எழுதி இருந்தாலோ தேர்வரின் மொத்த மதிப்பெண்ணில் இருந்து இரண்டு மதிப்பெண் மைனஸ் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஷேடிங் செய்வதில் சரியான முறையை பின்பற்றாவிட்டால் இரண்டு மதிப்பெண்கள் கழிக்கப்படும்.
அதனை தொடர்ந்து வினா தொகுப்பு புத்தகத்தின், அதாவது வினாத்தாள் எண்ணை சரியாக குறிப்பிடாமலும் விடைத்தாளில் அதற்கான இடத்தில் சரியாக மையிட்டு நிரப்பாமல் இருந்தாலும் 5 மதிப்பெண் கழிக்கப்படும். தேவைப்படும் இடத்தில் விரல் ரேகை வைக்க வேண்டும். மேலும் ரேகை வைக்காவிட்டால் இரண்டு மதிப்பெண் கழிக்கப்படும். எந்த கேள்விக்காவது விடைக்குறிப்பை தேர்வு செய்யாமல் காலியாக விட்டால் 2 மதிப்பெண் மைனஸ் செய்யப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதனால் தேர்வர்கள் கவனமாக தேர்வை எழுத அறிவுறுத்தப்படுகிறது.