இந்தியாவில் 15.89 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி – சுகாதாரத்துறை தகவல்!!
இந்தியாவில் இதுவரை 15.89 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி
இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. அதனால் மாநிலங்கள் தோறும் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் வேகமெடுத்துள்ளது. முன்னதாக முதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள நிலையில், தற்போது மே மாதம் 1 ஆம் தேதி முதல் மூன்றாம் கட்ட தடுப்பூசி போடும் பணிகள் துவங்கியுள்ளது.
இதன்படி இந்தியாவில் இதுவரை 15.89 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனாவுக்கு எதிரான மத்திய அரசின் தடுப்பூசி போடும் திட்டத்தின் கீழ், இன்று காலை (மே 4) வரை 23,35,822 முகாம்களில் 15,89,32,921 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கூடுதலாக 17,08,390 லட்சத்திற்கும் அதிகமான பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!
தொடர்ந்து 12 மாநிலத்தில் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் 4,06,339 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான கொரோனா பாதிப்புகளில் மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, உத்திர பிரதேசம், மேற்கு வங்கம், ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களில் மட்டும் 66.94 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்