தமிழகத்தில் ஊரடங்கு அமல், போக்குவரத்துக்கு தடை? மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விளக்கம்!

0
தமிழகத்தில் ஊரடங்கு அமல், போக்குவரத்துக்கு தடை? மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் ஊரடங்கு அமல், போக்குவரத்துக்கு தடை? மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் ஊரடங்கு அமல், போக்குவரத்துக்கு தடை? மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விளக்கம்!

இந்தியாவில் ஓமைக்ரான் வைரஸ் பரவினாலும் இதுவரை உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை. ஆனாலும் விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு மற்றும் போக்குவரத்து தடை செய்யப்படுவதற்கான சூழல் ஏற்படவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஓமைக்ரான் வைரஸ்:

தமிழகத்தில் கடந்த வருடம் முதல் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தீவிரமெடுத்து பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பட்டியலில் தமிழகம் முக்கிய இடத்தில் இருந்து வந்தது. இந்த கொரோனா தொற்று காலத்தில் ஆட்சி பொறுப்பேற்ற திமுக தலைமையிலான அரசு நோய் தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டியது. கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த மே மாதம் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டது.

Zoho நிறுவனத்தில் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு – கல்வித்தகுதி, அனுபவம், தேர்வு விவரம் விளக்கம்!

இதனால் சாலைகளில் காவல்துறையினர் கண்காணிப்பு பணிகளிலும் ஈடுபட்டனர். இந்த தீவிர முயற்சியின் காரணமாகவும், கொரோனா தடுப்பூசிகளின் விளைவாகவும் தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருகிறது. தினசரி தொற்று எண்ணிக்கை 1000க்கும் கீழ் பதிவாகிறது. அதனால் அரசு ஊரடங்கில் தளர்வுகளுக்கு அறிவித்ததை அடுத்து மக்கள் இயல்பு நிலை நோக்கி செல்ல தொடங்கியுள்ளனர். இந்த நேரத்தில் அடுத்த தாக்குதலாக ஓமைக்ரான் வைரஸ் தொற்று பரவி வருகிறது.

தமிழக கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – வாரத்திற்கு 6 நாட்கள் வகுப்பு கட்டாயம்!

கொரோனா வைரசலில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமைக்காரன் வைரஸ் தொற்று மற்ற நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது. நேற்று கர்நாடகாவில் 2 பேருக்கு ஓமைக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் அவர்கள், ஓமைக்ரான் தொற்று தடுப்பின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை ஓமைக்ரான் வைரஸ் பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. அதனால் ஊரடங்கு மற்றும் போக்குவரத்து தடை செய்யப்படுவதற்கான சூழல் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!