தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் புதிய சாதனை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டையில் 100% மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
புதிய சாதனை:
கொரோனா தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வர நாடு முழுவதும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையை தொடர்ந்து மூன்றாம் அலை பரவும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்வது தவிர்க்க முடியாத ஒன்றாகியுள்ளது. செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழக பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – இன்று முதல் கொரோனா தடுப்பூசி!
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 5.72 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அதிகம் தடுப்பூசி போடப்பட்ட மாநிலம் தமிழ்நாடு எனவும் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 100% தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
TN Job “FB Group” Join Now
பள்ளிகள் விரைவில் திறக்கப்பட இருப்பதால் ஆசிரியர்களுக்கும், பள்ளிகளில் பணிபுரிபவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆசிரியர்களின் குடும்ப நபர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும். புதுக்கோட்டையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரியலூரில் கர்ப்பிணிகள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது என அமைச்சர் அவர்கள் தெரிவித்து உள்ளார்.