தமிழகத்தில் 15 நாட்களில் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் – அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் அரசு சார்பில் அனைத்து நலத்திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், புதிய ரேஷன் அட்டைகள் பெற விண்ணப்பிப்போருக்கு 15 நாட்களில் ரேஷன் அட்டைகள் கிடைக்கும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
ரேஷன் அட்டைகள்:
தமிழக அரசு சார்பில் மக்களுக்கான அனைத்து நலத்திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது. மே மற்றும் ஜூன் மாதங்களில் கொரோனா நிவாரணமாக ரூ.4000 இரண்டு தவணையாக வழங்கப்பட்டது. மேலும் 14 மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பு, பொங்கல் பரிசு, வேட்டி, சட்டை உள்ளிட்ட அனைத்து நலத்திட்டங்களும் பெற ரேஷன் கடைகளை மக்கள் நாடுகின்றனர்.
தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் ஆகஸ்ட் 2 வரை மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!
இந்நிலையில் புதிதாக ரேஷன் அட்டைக்கு பெற பலர் விண்ணப்பித்து உள்ளனர். ஆனால் கொரோனா நிவாரணம் வழங்குவது மற்றும் தொடர் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக புதிய ரேஷன் அட்டை வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கூட்டுறவு துறை அலுவலர்களுக்கான பணி திறனாய்வு கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அதில் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள் கூறுகையில், கூட்டுறவு சங்கங்களில் வெளிப்படைத் தன்மையுடன் கடன் வழங்க வேண்டும். புதிய மருந்தகங்கள் மற்றும் புதிய திட்டங்கள் தொடங்கவும் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக அளவில் பயிர்க்கடன் வழங்கவும், அதை தாமதமின்றி வழங்கவும், விவசாயிகள் கேட்கும் உரங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் 2021-22 ஆம் ஆண்டு சுய உதவி குழுக்களுக்கு 2,570 கோடி ரூபாய் கடன் வழங்க மாநில அளவில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
TN Job “FB Group” Join Now
மேலும் கொரோனா நிவாரணத் தொகை இதுவரை பெறாதவர்களுக்கு இந்த மாதம் 31 ஆம் தேதிக்குள் வழங்கப்படும் எனவும், புதிய ரேஷன் அட்டை பெற விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்களுக்குள் ரேஷன் ஸ்மார்ட் அட்டை வழங்கப்படும். இனியும் ரேஷன் அட்டை பெற காத்திருக்க தேவையில்லை என அவர் தெரிவித்தார்.